உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 16, 2012

கடலூரில் மாணவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி முகாம்



கடலூரில் மாணவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி முகாம்



கடலூர்:




கடலூரில் கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடை கால கலைப்பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.  விழாவிற்கு ஜவகர் சிறுவர் மன்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். இதில் வக்கீல் அருணாச்சலம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக மாணவ- மாணவிகள் பாட்டு போட்டி, பரதநாட்டியம், சிலம்பு ஆட்டம், ஓவியம் போன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ஓவிய ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior