உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 18, 2012

கடலூர் பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்

கடலூர்:

கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட குழு வழங்கிய மனுவில் கூறியிருப்பது:


கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் பெருமாள் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மூலம் 40 கிராமங்களில் உள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் சகடுகள் மற்றும் மண் கலந்த நீரால் 16 கி.மீட்டர் நீளம், 1 கி.மீ அகலம் உள்ள ஏரி இன்று 8 கி.மீ அளவிற்கு தூர்ந்துவிட்டது. ஏரி தூர்ந்து கொண்டே வருவதால் 3 போகம் நெல் சாகுபடி செய்த காலம் போய், இன்று 1 போகம் செய்வதற்கே தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது.


இந்நிலையில் திருச்சோபுரம் பெரியபட்டில் உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு தேவையான நீரை பெருமாள் ஏரியில் இருந்து பயன்படுத்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலக அறிக்கை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை ராட்சத போர்வெல்கள் மூலம் எடுக்கப்படுமானால் நிலத்தடி நீர் வெகுவாக குறையும், கடல் நீர் உட்புகுந்து உப்புநீராக மாறி, சுற்றியுள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிடும். இதனால் 40 கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பறிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பெருமாள் ஏரியிலிருந்து தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க அனுமதி கொடுக்கக் கூடாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior