உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி வகுப்பு புறக்கணிப்பு

சி.முட்லூர்  :

          சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி நேற்று வகுப்பு புறக்கணிப்பு செய்தனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரிக்கு போதிய ஆசிரியர்கள், குடிநீர், சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று அடிப்படை வசதிகள் கோரி அனைத்து மாணவ, மாணவிகளும் வகுப்பிற்குச் செல்லாமல் புறக்கணிப்பு செய்து கல்லூரி முன்பு கோஷம் எழுப்பினர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior