உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் தேர்வு

கடலூர் :


        ஒடிசாவில் நடைபெறவுள்ள தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் தேர்வு பெற்றுள்ளனர்.

        சென்னையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. அதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார்கள் மணிகண்ட பிரபு, சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.அவர்களில் மணிகண்ட பிரபு 100 அடி பிரிவில் தங்கப்பதக்கமும், சுதாகர் 300 அடி பிரிவில் வெண்கலமும், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் 350 அடி பிரிவில் நான்காம் இடத்தையும் பிடித்தனர். இவர்கள் அடுத்த மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற போலீஸ்காரர்கள் மணிகண்ட பிரபு, சுதாகர், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோரை எஸ்.பி., பகலவன் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior