உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குரிய நேர்முக பொது வாய்மொழித் தேர்வு

விருத்தாசலம் :

       விருத்தாசலம் அரசு கல்லூரியில் நேர்முக பொது வாய்மொழித் தேர்வு நடந்தது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குரிய நேர்முக பொது வாய்மொழித் தேர்வு, தமிழ் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை வளாகத்தில் நடந்தது. சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் செல்வகுமாரன் தேர்வாளராகவும், திருவெண்ணெய்நல்லூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தங்கதுரை நெறியாளராகவும் இருந்தனர். இதில், விழுப்புரம் மாவட்ட நரிக்குறவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் நடந்த நேர்முக பொது வாய்மொழித் தேர்வில் தமிழ்த்துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் பங்கேற்று, கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior