உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 01, 2013

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வடலூர் எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம்





நெய்வேலி:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று 31/05/2013 வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 497 மதிப்பெண் பெற்றுள்ளார். மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். 

அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு-

தமிழ்-99

ஆங்கிலம்-99

கணிதம்-99

அறிவியல்-100

சமூக அறிவியல்-100

மொத்தம்-497.

மாணவி ஆர்த்தி வடலூர் புதுநகர் பகுதியில் வசிக்கிறார். அப்பா அசோகன் இந்தியன் வங்கியில் நகை ஆய்வாளர். அம்மா சியாமளா. 

மாணவி ஆர்த்தி கூறியது:-
நான் சிறு வயது முதல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் படித்து வந்தேன். தேர்வில் அதிகமதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தலைமை ஆசிரியை சுகிதா மற்றும் ஆசிரியர்கள் அதிக ஊக்கம் அளித்தனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்றேன். டாக்டருக்கு படித்து பொதுமக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். மாணவி ஆர்த்திக்கு பரதநாட்டியம் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உண்டு.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior