உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

விருத்தாசலம் சத்தியவாடிஆலந்துறை ஈஸ்வரர் கோவில் சிலைகள் மீட்பு

திட்டக்குடி:

              விருத்தாசலத்தை அடுத்துள்ள சத்தியவாடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி இரவு மர்ம ஆசாமிகள் சிலர் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கே இருந்த 5 சிலைகளை திருடிச் சென்றனர்.

               இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வேப்பூர் அருகே உள்ள திருப்பயர் கிராமத்தில் உள்ள ஊர் எல்லையில் ஏரிக்கரையில் முட்புதரில் துணியால் கட்டப்பட்டு முட்டைகள் கிடந்தன. அப்பகுதியாக சென்ற ஊர்மக்கள் இதைப்பார்த்து வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

            அதன்பேரில் வேப்பூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு பாலு மற்றும் போலீசார் அந்த முட்டை களை எடுத்து வந்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து பிரித்து பார்த்தனர். அதில் சிலைகள் இருந்தன. வேப்பூர் போலீசார் விருத்தாசலம் போலிஸ் துணை சூப்பிரண்டு அறிவழகனுக்கு தகவல் கொடுத்து சத்தியவாடி சிவன் கோயிலில் திருட்டு போன சிலைகளாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு அந்த கோயிலின் அறங்காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

             அறங்காவலர்கள் இந்த சிலைகளை பார்த்து திருட்டுப்போன சிலைகள் தான் என உறுதி செய்தனர். தொடர்ந்து ஈஸ்வரன் கோவிலில் இருந்த போட்டோக்களை ஒப்பிட்டு அவை திருட்டுப்போன சிலைகள் என உறுதி செய்யப்பட்டது.
 
 
 
 

Read more »

திங்கள், ஜூலை 04, 2011

விருத்தாசலம் சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் சீரமைக்க கோரிக்கை


விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் காணப்படும் ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் கோபுரம்.
 
விருத்தாசலம்:

         விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சிவன் கோயில் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
             கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாரம் சத்தியவாடி கிராமத்தில் மிகத் தொன்மை வாய்ந்த சிவன்கோயில் உள்ளது. கோயிலில் உள்ள சிவனை ஆலந்துறை ஈஸ்வரர் என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இப்பழைமைவாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும், சிலர் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகவும் கூறுகின்றனர். 

         ஆனால் கோயில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கான கல்வெட்டு உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் 200 அல்லது 800 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் தற்போது போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் பாழடைந்து வருகிறது.
 

 இது குறித்து சத்தியவாடி கிராம மக்கள் தெரிவித்தது: 


             "ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் ஆலந்துறை ஈஸ்வரர், அழகியபொன்மணி அம்மன், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் உள்ளன. இந்த கோயில் தற்போது இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது கோயில் வெளிப்புற கோபுரம், முன்பக்க கோபுர கதவு, மூலவர் கோயிலில் உள்ள கதவுகள் மிகவும் மோசமான நிலையிலும், உடைந்து விழும் நிலையிலும் உள்ளது.
 

          அதேபோல் கோயில் உள்பக்கம் கட்டப்பட்டுள்ள சிறுசிறு மண்டபங்களும் பாழடைந்து உள்ளது. புகழ்பெற்று விளங்கிய ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் தற்போது பராமரிப்பும், பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும் வருத்தமளிக்கிறது' என தெரிவித்தனர். எனவே இந்து அறநிலையத் துறை நிர்வாகம் அல்லது தொடர்புடைய அரசு நிர்வாகம் பழைமைவாய்ந்த சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. 
 


 

Read more »

சனி, ஜூன் 25, 2011

விருத்தாசலம் ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் வெண்கல சாமி சிலைகள் திருட்டு


திருடுபோன சிலைகள் குறித்த ஆவணங்களை பார்வையிடுகிறார் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன் (இடமிருந்து 2-வது). (வலதுபடம்) காணாமல் போன வெண்கலச் சிலைகள்
 
விருத்தாசலம்:

             விருத்தாசலம் அருகே சத்தியவாடி கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் இருந்த 5 வெண்கல சிலைகளை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு திருடிச்சென்றுள்ளனர்.

             வியாழக்கிழமை மாலை, வழிபாடுகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, காலை கிராம மக்கள் கோயிலில் பார்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கோயிலில் இருந்த உற்சவ மூர்த்தியான சுமார் 2 அடிக்குமேல் உயரமுள்ள ஆலந்துறை ஈஸ்வரர், அழகிய பொன்மணி அம்மன் சிலை, அதேபோல் சுமார் 2 அடி உயரமுள்ள அஸ்திரதேவர் சிலை, விநாயகர் சிலை, சுமார் அரை அடி உயரமுள்ள சண்டிகேஸ்வரர் சிலை உள்ளிட்ட 5 வெண்கலச் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

            இதுகுறித்து அறநிலையத் துறை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியராஜன் போலீசா ருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன், கோயிலுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் கோயில் பின்புறம் உள்ள குளத்தில் சிலைகளை வீசியிருப்பார்களா? என தேடிபார்த்தனர். காணாமல் போன சிலைகள் விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். 

போதிய பராமரிப்பு இன்றி: 

                ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் முகலாயர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என்றும், சிலர் 200 ஆண்களுக்கு முன்னர் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர்.    கோயில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கோயில் இந்து அறநிலையத் துறையின்கீழ் செயல்பட்டும் கோயிலில் போதிய பாதுகாப்பு, பராமரிப்பு வசதிகள் இல்லாமல் கோயில் கோபுரம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

             அதேபோல் மூலவர் அறையில் உள்ள கதவுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. கதவுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் மர்ம நபர்கள் எளிதாக சிலைகளை திருடிச் சென்றுள்ளனர் என அறியப்படுகிறது. இதனால், அறநிலையத்துறை பழைமைவாய்ந்த கோயில்களை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior