உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 25, 2011

விருத்தாசலம் ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் வெண்கல சாமி சிலைகள் திருட்டு


திருடுபோன சிலைகள் குறித்த ஆவணங்களை பார்வையிடுகிறார் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன் (இடமிருந்து 2-வது). (வலதுபடம்) காணாமல் போன வெண்கலச் சிலைகள்
 
விருத்தாசலம்:

             விருத்தாசலம் அருகே சத்தியவாடி கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் இருந்த 5 வெண்கல சிலைகளை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு திருடிச்சென்றுள்ளனர்.

             வியாழக்கிழமை மாலை, வழிபாடுகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, காலை கிராம மக்கள் கோயிலில் பார்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கோயிலில் இருந்த உற்சவ மூர்த்தியான சுமார் 2 அடிக்குமேல் உயரமுள்ள ஆலந்துறை ஈஸ்வரர், அழகிய பொன்மணி அம்மன் சிலை, அதேபோல் சுமார் 2 அடி உயரமுள்ள அஸ்திரதேவர் சிலை, விநாயகர் சிலை, சுமார் அரை அடி உயரமுள்ள சண்டிகேஸ்வரர் சிலை உள்ளிட்ட 5 வெண்கலச் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

            இதுகுறித்து அறநிலையத் துறை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியராஜன் போலீசா ருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன், கோயிலுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் கோயில் பின்புறம் உள்ள குளத்தில் சிலைகளை வீசியிருப்பார்களா? என தேடிபார்த்தனர். காணாமல் போன சிலைகள் விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். 

போதிய பராமரிப்பு இன்றி: 

                ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் முகலாயர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என்றும், சிலர் 200 ஆண்களுக்கு முன்னர் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர்.    கோயில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கோயில் இந்து அறநிலையத் துறையின்கீழ் செயல்பட்டும் கோயிலில் போதிய பாதுகாப்பு, பராமரிப்பு வசதிகள் இல்லாமல் கோயில் கோபுரம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

             அதேபோல் மூலவர் அறையில் உள்ள கதவுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. கதவுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் மர்ம நபர்கள் எளிதாக சிலைகளை திருடிச் சென்றுள்ளனர் என அறியப்படுகிறது. இதனால், அறநிலையத்துறை பழைமைவாய்ந்த கோயில்களை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior