உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




உலக மகளிர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக மகளிர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 14, 2012

நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா

பண்ருட்டி:

         உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

          பண்ருட்டி வட்டம் கீழக்கொல்லையில் நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் நேஷனல் கல்வியியல் கல்லூரி, நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் நெய்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து மகளிர் தினவிழாவை கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடத்தின. அறக்கட்டளைத் தலைவர் ஆர்.சந்திரசேகர் தலைமையில் நடந்த விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பைகளையும், தையல் இயந்திரத்தையும் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.சந்திரசேகர் வழங்கினார்.  நெய்வேலி ரோட்டரி சங்கத் தலைவி மருத்துவர் அன்புக்கிளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மகளிர் குழுத் தலைவர் நடராஜன் வாழ்த்திப் பேசினார். ரோட்டரி செயலர் மு.புலேந்திரன் நன்றி கூறினார்.

Read more »

வியாழன், மார்ச் 10, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் உலக மகளிர் தினம் மாணவிகள் உறுதிமொழி

விருத்தாசலம் : 

               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மகளிர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் 100வது மகளிர் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். கல்லூரி முதல்வர் மனோன்மணி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் ராணி, புவனேஸ்வரி, வேணி முன்னிலை வகித்தனர்.கல்லூரி மாணவிகள் பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் முன்னேற்றம், சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய தகுதிகள் குறித்து உறுதி மொழி எடுத்தனர். தமிழ்த் துறையை சேர்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

கடலூர்:

                 கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  

            கல்லூரி நிர்வாகம் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் ஜூனியர் சேம்பர் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தன. விழாவுககு கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் தலைமை வகித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணா சிங்காரவேலு சிறப்புரை நிகழ்த்தினார்.  

               பெண்களுக்கான சட்டங்கள், நுகர்வோர் உரிமைகள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், நுகர்வோர் ஆலோசகரும் பி.எஸ்.என்.எல். கோட்டப் பொறியாளருமான பால்கி, நுகர்வோர் சட்டப் பிரிவு பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் ஆகியோர் பேசினர். ஜூனியர் சேம்பர் பெண்கள் பிரிவு சார்பில் மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. போராசிரியை கோமதி நன்றி கூறினார். 


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior