உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 10, 2011

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

கடலூர்:

                 கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  

            கல்லூரி நிர்வாகம் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் ஜூனியர் சேம்பர் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தன. விழாவுககு கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் தலைமை வகித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணா சிங்காரவேலு சிறப்புரை நிகழ்த்தினார்.  

               பெண்களுக்கான சட்டங்கள், நுகர்வோர் உரிமைகள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், நுகர்வோர் ஆலோசகரும் பி.எஸ்.என்.எல். கோட்டப் பொறியாளருமான பால்கி, நுகர்வோர் சட்டப் பிரிவு பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் ஆகியோர் பேசினர். ஜூனியர் சேம்பர் பெண்கள் பிரிவு சார்பில் மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. போராசிரியை கோமதி நன்றி கூறினார். 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior