உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஜெயங்கொண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயங்கொண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 15, 2010

ஜெயங்கொண்டத்தில் புதிய மின்நிலையம்: என்.எல்.சி. தலைவர் அன்சாரி தகவல்

நெய்வேலி:

            ஜெயங்கொண்டத்தில் புதிய மின்நிலையம் அமைக்கப்படும் என்று என்.எல். சி. தலைவர் அன்சாரி கூறினார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி  பேட்டியளித் தார். 
அப்போது என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி கூறியது:-

             என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டியில் முதல் 8 மாதங்களில் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்நிலையங்கள் 1152.711 கோடி யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டை காட்டிலும் அதிகம். புதிய திட்டங்களை பொருத்த வரை உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஹாட்டாம்பூர் பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

                 மேலும், ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் 125 மெகாவாட் மின்உற்பத்தி பிரிவு இவ்வாண்டு ஜூன் 5ந் தேதி பரிசோதனை முறையில் இயக்கி வைக்கப்பட்டது. நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலைய விரிவாக்கத்திட்டத்தின் முதல் 250 மெகாவாட் மின்உற்பத்தி பிரிவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார் கிறோம். மேலும், நாகை மாவட்டம் சீர்காழியில் 2000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையத்தை அமைக்க உள்ளோம்.

                  இதனை தொடர்ந்து மேலும் 2000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை மற்றொரு இடத்தில் தொடங்க உள் ளோம். ஜெயங்கொண்டத்தில் சுரங்கம் மற்றும் மின் நிலையம் அமைக்க திட்ட மிட்டு இருந்தோம். அங்கு நிலம் கையகப்படுத்தும் பணி மிகப்பெரியளவில் உள்ளது.  எனவே அப்பகுதியில் பொருளாதார மாற்றம் ஏற்பட வேண்டும் என அங்கும் வசிக்கும் மக்கள் விரும்பும் பட்சத்தில் அவர் களாகவே தங்கள் நிலங்களை என்.எல்.சி.யிடம் வழங்க முன்வந்தால், மின்நிலையம் அமைப்பது குறித்து பரீசிலனை செய்வோம்.

               அப்பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை காலி செய்யுங்கள் என்று கூறுவதற்கு உணர்வு ரீதியாக நாங்கள் தயங்குகிறோம். ஏனெனில் அவர்கள் காலம் காலமாக அவ்விடத்தில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்களை வேறு இடங்களுக்கு போக சொல்ல மனமில்லை. இருப்பினும், 2017ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம். 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் சீர்காழி மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் அமைக்க உள்ள மின்நிலையங்களுக்கு பூர்வாங்க பணிகளை மேற்கொள்வோம்.

                      தற்போது, என்.எல்.சி. நிறுவனம் பழுபு  நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியை எரி பொருளாக கொண்ட புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அனைத்துதுறைகளிலும் வளர்ச்சியடைந்து வரும் இந்த நிறுவனம் தனது விரிவாக்க திட்டங்களின் மூலம் அடுத்த சில சீடுண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவுள்ளது. அப்படி, புதிய திட்டங்களை நிறைவேற்றிய நிலையில், என்.எல்.சி. நிறுவனத்தின் பழுபு நிலக்கரி மற்றும் நிலக்கரி உற்பத்தி திறன் தற்போதைய அளவை விட மூன்று மடங்கு அதிரிக்கும் எனஎதிர்பார்க்கபடுகிறது.

                  என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தளராத உழைப்பால் விரைவில் இந்நிறுவனம் மினிரத்னா தகுதியிலிருந்து நவரத்னா தகுதிக்கு உயர்த்தபட இருக்கிறது. நாட்டின் அனைத்து பகுதி களுக்கும் என்.எல்.சி. தனது சேவையை விரிவுப்படுத்தப் பட உள்ளது.  இவ்வாறு என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி கூறினார்.

Read more »

வியாழன், ஏப்ரல் 15, 2010

மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது

கடலூர்: 

                    புதுச்சேரியிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு அரசு பஸ்சில் சூட்கேஸ் மற்றும் பைகளில் 250 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன், ஏட்டு அமிர்தலிங்கம் ஆகியோர் நேற்று ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் இரண்டு சூட்கேஸ் மற்றும் இரண்டு பைகளில் மது பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. உடன் சந்தேக நபர்கள் நான்கு பேரை பஸ்சிலிருந்து இறக்கி விசாரணை செய்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சிங்காரவேல் (30), ராமராஜன் மகன் பாலகுரு (30) ஆகியோர் என்பதும். இவர்கள் இருவரும் புதுச்சேரியிலிருந்து ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்காக மது பாட்டில்களை பஸ்சில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 250 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர் .இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சிங்காரவேல், பாலகுரு ஆகியோரை கைது செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

வியாழன், ஏப்ரல் 08, 2010

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு, 'சஸ்பெண்ட்': சட்டசபையில் அமளி, கூச்சல்


Latest indian and world political news information


              தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் நேற்று சட்டசபையில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை அருகில் திரண்டு சென்று கோஷம் போட்டு, தரையில் அமர்ந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வெளியேற்றி, நாளை வரை சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், 

தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, 

                    'கடந்த ஆட்சியாளர்கள், என்னை மக்கள் மன்றத்தில் இருந்து ஒதுக்குவதற்காக என்னை விரட்டினர். அப்போது, ஒரு உன்னதமான தலைவர், தொண்டரை எப்படி அரவணைப்பாரோ, அதேபோல் என்னை இந்த இயக்கத்தில் இணைத்து கருணாநிதி அரவணைத்தார்' என்றார். உடனே, அ.தி.மு.க., உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர். செங்கோட்டையன் எழுந்து, ஒரு கருத்தை தெரிவித்ததும், அதை நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

                              அருண்மொழித்தேவனும், அரியும் கடும் கூச்சலிட்டு கோஷம் போட்டதும், அவர்களை சபையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். சபைக் காவலர்கள், சபைக்குள் நுழைந்து இருவரையும் வெளியேற்ற முயற்சித்தனர். அதற்குள், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்களும், பெண் உறுப்பினர்களும் சபாநாயகர் இருக்கை அருகே சென்று தரையில் உட்கார்ந்தனர். சபாநாயகர் ஆவுடையப்பன் சிரித்துக்கொண்டே, 'அமைதியாக உட்காருவதாக இருந்தால் உட்காருங்கள்' என்றார். இப்படிக் கூறியதும்,'ஒழிக' என்றும், 'நியாயம் வேண்டும்' என்றும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். இதனால், சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

                         ஒரு பக்கம், 20க்கும் மேற்பட்ட சபைக் காவலர்கள் இரு உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருக்க, மறுபக்கம் சபாநாயகர் இருக்கை அருகே அமர்ந்து மற்ற உறுப்பினர்கள் கோஷம் போட்டதால், சபையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை உருவானது. அந்த நேரம் பார்த்து, சபைக் காவலர்களின் பிடியில் இருந்து விடுபட்ட அருண்மொழித்தேவன், கோஷம் போட்ட உறுப்பினர்களுடன் நைசாக உட்கார்ந்து கொண்டார். இதைக் கவனித்த அமைச்சர் அன்பழகன், 'சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்ட உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் சபைக்குள்ளே இருந்து கோஷம் போடுகின்றனர். இதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது' என்றார்.

                              அதன்பின், 'சபைக் காவலர்கள் என்னுடைய உத்தரவை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், உங்களது கடமையை செய்யாதவர்களாகி விடுவீர்கள்' என சபாநாயகர் எச்சரித்தார். இதையடுத்து, சபைக்காவலர்கள் தங்கள் முழுபலத்தையும் பயன்படுத்தி, அருண்மொழித்தேவனையும், அரியையும் வெளியேற்ற முயன்றனர். அப்போது, அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, 'அ.தி.மு.க., உறுப்பினர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு, தங்கள் கட்சி உறுப்பினர் பேசி முடித்து, அடுத்து தி.மு.க., உறுப்பினர் பேச ஆரம்பித்ததும், சபையை நடக்க விடாமல் தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்கள் அனைவரையும் பட்ஜெட் மீதான பொது விவாதம் வரை தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும்' என தீர்மானம் கொண்டு வந்தார்.

                         இதை குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றிய சபாநாயகர், 'அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபை மரபுகளை மதிக்காமல், திட்டமிட்டு தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். எனவே, இன்று (நேற்று) சபைக்கு வந்து இடையூறு செய்த அக்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உட்பட அனைவரையும், வரும் 9ம் தேதி(நாளை) வரை நீக்கி வைக்கப்படுகின்றனர்' என்றார். இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காலை 11.47க்கு துவங்கிய அமளி 12.03க்கு ஓய்ந்தது.

எத்தனை பேர் நீக்கம்?: 

                  சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் எண்ணிக்கை 57. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய மூன்று பேர் மட்டும் நேற்று சபைக்கு வரவில்லை. மற்ற 54 பேரும் சபைக்கு வந்ததாக, அக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். 54 பேரில், 52 பேர் மட்டுமே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் அ.தி.மு.க., உறுப்பினர்களாக இருந்தபோதும், நேற்று நடந்த அமளியில் அவர்கள் பங்கேற்காமல் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். இவர்கள் இருவரும் சபையில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

downlaod this page as pdf

Read more »

பாம்பன் பாலத்தின் தொழில்நுட்பத்துடன்கட்டப்பட்ட பாலம்; 15 ஆண்டுகளில் 'வீக்'

சேத்தியாத்தோப்பு: 
 
                       சேத்தியாத்தோப்பில் புதிய பாலம் கட்டப்பட்ட 15 ஆண்டுகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல வீனமடைந்து வருகிறது. சேத்தியாத்தோப்பில் வெள்ளாற்றின் குறுக்கே போக்குவரத்திற்காக பாம்பன் பாலத்தின் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட பாலம் கடந்த 95ம் ஆண்டு திறக்கப்பட்டது. கட்டப்பட்ட 15 ஆண்டுகளிலேயே அனைத்து இணைப்புகளிலும் விரிசல் ஏற்பட் டுள்ளது.

                      ஆனால், தற்போது பக்கவாட்டு சுவர்கள் இணைப்பு பாலத்தின் தடுப்பு சுவர் பாலத்தின் பில்லர்களை இணைக்கும் தரை தளம் என பல இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. குறிப்பாக பாலத்தின் தென்புறத்திலிருந்து இரண்டாவது பில்லர் இணைப்பு சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் உடைப்பு காணப்படுகிறது.இதுபற்றி ஒவ்வொரு முறை சுட்டிகாட்டப் பட் டும் அதிகாரிகள் அவ்விடத்தில் தாரை காய்ச்சி ஓட்டையை அடைப்பதும் சில நாட்களில் தார் உருகி உருக்குலைந்து பெயர்ந்து விழுந்து மீண்டும் உடைப்பு அதிகமாவதும் தொடர்கிறது. பாலத்தின் உடைப்பு பகுதியில் பஸ், லாரி, கண்டெய்னர் வாகனங்கள் கடந்து செல்லும் போது பக்கவாட்டு நடைபாதை கட்டைகளில் நடந்து செல்பவர்கள் உயிர் பயத்தின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.

                         உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இருசக்கர வாகனங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்கள் அந்த உடைப்பில் சிக்கி தடுமாறி விழுகின்றனர். ஆனால் பாலத்தை பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலை துறையினர் அலட்சிய போக்கோடு செயல்படுகின்றனர். தமிழகம் முழுவதும் பாலங்கள் கட்டுவதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டு தமிழக அரசு சேத்தியாத்தோப்பு பாலத்தை உரிய பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும். இல்லையேல் பெரும் உயிரிழப்புகளையும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், அணைக்கரை, ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
 
downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior