உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




துவரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துவரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 13, 2010

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் துவரைசாகுபடி குறித்து வயல்தின விழா

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் துவரை சாகுபடி விழிப்புணர்வு குறித்த வயல் தின விழா நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் துவரையில் நேரடி விதைப்பிற் கும் நடவு செய்யப்பட்ட முறைக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்கிப் பேசினார்.
                   பின்னர் குப்பநத்தம் கிராமத்தில் விவசாயி கோபாலகிருஷ்ணன் நிலத்தில் நடவு செய்யப்பட்ட துவரை செடிகளை ஆய்வு செய்து சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜூ, அருட்செந்தில், விஜயகீதா, தனுஷ்கோடி, கண் ணன், ரவிச்சந்திரன் உட் பட பலர் பங்கேற்றனர்.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 05, 2010

பண்ருட்டி வட்டாரத்தில் துவரை சாகுபடிக்கு மானியம்

பண்ருட்டி:

             பண்ருட்டி வட்டாரத்தில் துவரை சாகுபடியை ஊக்கப்படுத்த ஒரு ஹெக்டேர் துவரை சாகுபடிக்கு ரூ.5 ஆயிரம் மானியம் அளிக்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

                தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் துவரை உற்பத்தியை அதிகப்படுத்த, ஒரு ஹெக்டேர் சாகுபடி செய்ய தேவையான விதை, விதை நேர்த்தி மருந்து, நுண்ணுயிரி பொட்டலம், நுண்ணுரம், ரசாயன உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் யாவும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. சாலையோரங்களில் வடிகால் வசதியுள்ள இறுமண்பாடான நிலம் கொண்ட விவசாயிகள் உடன் வேளாண்மைத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

Read more »

வியாழன், மார்ச் 04, 2010

நாட்டுத்துவரை விளைச்சல் அமோகம்

சிறுபாக்கம்:

              நாட்டுத்துவரையின் அமோக விளைச் சலால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40 கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் இயற்கை உரத்துடன் கடந்த டிசம்பர் மாதம் மல்லி பயிருடன் ஊடு பயிராக நாட்டு துவரையினை விளைவித்தனர். தற்போது மல்லி பயிர் அறுவடை செய் தபின், நாட்டு துவரை பூத்துக்குலுங்கி அதிகளவு காய்ப் பிடிப்புடன் காணப்படுவதால் நல்ல விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள் ளனர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior