உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

பண்ருட்டி வட்டாரத்தில் துவரை சாகுபடிக்கு மானியம்

பண்ருட்டி:

             பண்ருட்டி வட்டாரத்தில் துவரை சாகுபடியை ஊக்கப்படுத்த ஒரு ஹெக்டேர் துவரை சாகுபடிக்கு ரூ.5 ஆயிரம் மானியம் அளிக்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

                தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் துவரை உற்பத்தியை அதிகப்படுத்த, ஒரு ஹெக்டேர் சாகுபடி செய்ய தேவையான விதை, விதை நேர்த்தி மருந்து, நுண்ணுயிரி பொட்டலம், நுண்ணுரம், ரசாயன உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் யாவும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. சாலையோரங்களில் வடிகால் வசதியுள்ள இறுமண்பாடான நிலம் கொண்ட விவசாயிகள் உடன் வேளாண்மைத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior