உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




போலி டாக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலி டாக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 11, 2011

நெய்வேலியில் போலி டாக்டர் கைது

நெய்வேலி:

           நெய்வேலி அருகே ஊ.மங்கலம் கோட்டேரி மெயின் ரோட்டில் பல ஆண்டுகளாக கிளினிக் வைத்து நோயாளி ளுக்கு மருத்துவம் பார்த்து வந்தவர் நாராயணசாமி. இவரது சிகிச்சையில் பலருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தனர். மேலும் இவரது சிகிச்சை மீது பலருக்கு அதிருப்தி இருந்து வந்தது.

            இவர் எம்.பி.பி.எஸ் டாக்டர் தானா என்பதில் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.   இதுகுறித்து பாதிக்கப்பட்ட பலர் அப்பகுதி கிராம நிர்வாகி வெங்கடாசலத்திலடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார்.  இதைத்தொடர்ந்து போலீசார் நாராயணசாமி நடத்தி வந்த கிளினிக்குக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழோ கிளினிக் நடத்துவதற்கான அனுமதியோ, ஆவணங்களோ இல்லை.  மேலும் நாராயணசாமி எஸ்.எஸ்.எல்.சி. மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து நாராயணசாமியை போலீசார் கைது செய்தனர். 

Read more »

சனி, ஜூன் 12, 2010

பண்ருட்டியில் போலி டாக்டர் இருவர் கைது

பண்ருட்டி : 

                  பண்ருட்டியில் போலி டாக்டர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் நிப்பேன்ராய் (40). இவர் கடந்த 12 ஆண்டுகளாக பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ராய் என்ற பெயரில் கிளினிக் நடத்தி மூலம், பவுத்திரம் உள்ளிட்ட வியாதிகளுக்கு மருத்துவம் அளித்து வந்தார். பண்ருட்டியைச் சேர்ந்தவர் நீலமேகம் (43). இவர் கும்பகோணம் சாலையில் 3 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி அலோபதி முறையில் மருத்துவம் செய்தார் .இருவரும் போலி டாக்டர்கள் என சுகாதாரத் துறைக்கு புகார் தெரிவித்ததன் பேரில் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார்.

                     இதனையடுத்து பண்ருட்டி இன்ஸ்பெக்டர் செல்வம் இருவரிடமும் விசாரணை மேற்கொண் டதில் நிப்பேன்ராய் பி.ஏ., முதலாம் ஆண்டு வரையும், நீலமேகம் பத்தாம் வகுப்பு வரையும் படித்திருப்பது தெரியவந்தது. பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து நிப்பேன் ராய், நீலமேகம் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர்.


Read more »

செவ்வாய், ஏப்ரல் 20, 2010

பெண்ணாடத்தில் போலி டாக்டர் கைது


கடலூர்: 

                பெண்ணாடத்தில் போலி டாக்டரை போலீ சார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் எல்லையம்மன் கோவில் தெரு வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் குணசேகரன்(56). இவர் அதே பகுதியில் அரசு அங்கீகாரம் இல்லாமல் அலோபதி மருத்துவம் செய்து வந்தார். பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வலம் புரி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து, குணசேகரனை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் போலி டாக்டர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

download this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior