உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வேளாண்மை விரிவாக்க மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளாண்மை விரிவாக்க மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 07, 2012

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக புவி அமைப்பு தகவல் பெற ஏற்பாடு

கடலூர்,:


கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண்மை துறையில் நிலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த புவி அமைப்பு தகவல் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக அமைக்கப் பட்டுள்ள அலுவலர்கள் குழுவிற்கு சிறப்பு 5 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.


புவியியல் ரீதியாக உலக வரைப்படம் உள்ளது. இதி லிருந்து பல்வேறு தகவல்கள் பெற வழிகாணப்பட்டுள் ளது. செயற்கை கோள் உதவியுடன் புவி அமைப்பு அதன் பல்வேறு இடங்களின் தன்மை துறை ரீதியாக தகவல்கள் பெற வழி உண்டு.  இதில் வேளாண்மை துறையில் அதற்கேற்ப தகவல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள் ளது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நிலத்தடி நீர், மண் உள்ளிட்டவை களின் தன்மை குறித்து விவரங்கள் செயற்கைகோள் மூலம் பெற்று தரும் பணியை மேற்கொள்ள உள்ளது.


முதல் முறையாக இது போன்ற திட்ட செயல்பாடு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது இதற்காக வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, தேசிய கணினி மையம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் 10 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழு பூலோக வரைப்படத்தில் கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீரின் தன்மை, மண் வளம் குறித்து தகவல்களை செயற்கோள் மூலம் பெற்று பதிவு செய்யும். இக்குழுவுக்கு 5 நாள் பயிற்சி கடலூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.

பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உதவி செயற் பொறியாளர் சங்கரசேகர் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் ராதா கிருஷ்ணன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். புவி தகவல் தொழில்நுட்பம் பற்றி பிரவு தொகுப்புரையாற்றினார். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்பாட்டுக் காக செயல்படுத்தப்படும் திட்டகளான தடுப்பணை, குளம் அமைப்பது உள் ளிட்டவைகளுக்கு திட்டத் துக்கு தேர்வு செய்யப்படும் இடம் உரிய பயனை தருமா என்பதற்கு புவி அமைப்பில் இருந்து செயற்கைகோள் மூலம் பெறப்படும் தகவல் பயனுள்ளதாக இருக்கும்.


இது போன்று மண்ணின் தன்மை அறிந்து கொள்வதால் வேளாண்மை செழிப்பிற்கு வழிவகை செய்யும். இது போன்ற திட்டங்கள் அரசு திட்ட செயல்பாட்டுக்கு மட்டு மின்றி விவசாயிகளுக்கும் பலன் தரும். இதற்கு முக்கிய காரணம் வேளாண்மை செயல்பாடுகளுக்கு சரியான இடத்தை தேர்வு செய்ய புவி அமைப்பு தகவல் வழிகாட்டும் என்றனர் சம்மந்தப்பட்ட துறையினர்.




Read more »

திங்கள், மே 23, 2011

கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் விவசாயத்திற்கு ரூ.972 கோடி கடன்

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 972 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.. 

கடலூர் மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி கடன் திட்டத்தை வெளியிட்டு கூறியது: 

          கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2011 - 12ல் ஆண்டு கடன் திட்டம் 1,662.55 ரூபாய் கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண்மை வளர்ச்சிக்காக 1,150.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 69 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2010 - 11ம் ஆண்டில் ஆண்டு கடன் திட்டம் 1,448.50 கோடி ரூபாய். இந்த ஆண்டு 14.77 சதவீதம் வளர்ச்சியை திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேளாண்மை துறையில் 1,017.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,041.89 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

              வேளாண்மை இல்லாத பிற திட்டங்களுக்கு 66.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 68.56 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கடன் திட்டத்தின் மூலம் 3,73,335 பயனாளிகள் பயனடைய உள்ளனர். நடப்பு ஆண்டில் பயிர் கடனாக மட்டும் 972.64 கோடி ரூபாய் பயர் கடனாக வழங்கப்படவுள்ளது. வணிக வங்கிகளின் மூலம் 1,307.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,752.72 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் 255.70 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.



Read more »

செவ்வாய், மார்ச் 15, 2011

விருத்தாசலம் அருகே பழுதடைந்த வேளாண்மை விரிவாக்க மையம்


விருத்தாசலத்தை அடுத்த பாலக்கொல்லையில் பழுதடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் வேளாண்மை விரிவாக்க மையம்.
விருத்தாசலம்:

          விருத்தாசலம் அருகில் உள்ள பாலக்கொல்லை வேளாண்மை விரிவாக்க மையம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இம்மையத்திலேயே வேளாண் பொருள்கள் வைக்கப்படுவதால் பாதுகாப்பாக இருக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  

              விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதி பாலக்கொல்லை கிராமம். இங்கு தமிழக அரசு சார்பில் வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பாலக்கொல்லை மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 கிராமங்களுக்குத் தேவையான வேளாண் பொருள்களான ஜிப்சம் உள்ளிட்ட உரங்களை வைத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.  

             ஜிப்சம் உள்ளிட்ட உரவகைகள் பல்லாயிரக்கணக்கில் மதிக்கத்தக்கதாகும். ஆனால் உரங்கள் மற்றும் வேளாண்மை பொருள்கள் வைத்திருக்கக்கூடிய பாலக்கொல்லை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையிலும், பராமரிப்பு இல்லாத நிலையிலும் உள்ளது.  

இதுகுறித்து பாலக்கொல்லை கிராம மக்கள் தெரிவித்தது:  

               வேளாண்மை விரிவாக்க மையம் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது. கட்டடத்தின் முன்பக்கம் செடிகொடிகள், முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் இங்கு வைத்திருக்கும் உரம் போன்ற பொருள்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது.  மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடம், சுகாதார வளாகம் என பல்வேறு கட்டடங்கள் கட்டித்தரும் அரசு பழுதடைந்துள்ள வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.  

               எனவே தொடர்புடைய துறை அதிகாரிகள் பாலக்கொல்லை வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Read more »

புதன், பிப்ரவரி 17, 2010

மானியத்தில் ஜிப்சம் வாங்கிக்கங்க! விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு


அணைக்கட்டு:

                 விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிப்சம் வழங்கப்படும் என்று அணைக்கட்டு வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவக்குமார்சிங் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது: 

              அணைக்கட்டு வட்டாரத்தில் இரவை மணிலா பயிர் செய்யப்பட்டு வருகிறது. மணிலாவில் களையெடுக்கும்போது ஜிப்சம் போட்டால் பயிர் நன்றாக இருக்கும்.

              இதற்காக விவசாய துறை சார்பில் அணைக்கட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐசோபாம் எண்ணெய் வித்து மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் ஒரு எக்டேருக்கு 400 கிலோ வீதம் வழங்கப் படுகிறது. எனவே விவசாயிகள் வாங்கிச் சென்று அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு சிவக்குமார்சிங் தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior