உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

சிதம்பரம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை ரேஷன் கார்டுகள் நீக்கத்தால் திடீர் பரபரப்பு

சிதம்பரம் :

                        முறைகேடாக நீக்கப் பட்ட குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க கோரி கிராம மக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

                        சிதம்பரம் அடுத்த பரமேஸ்வரநல்லூர் கிராமத்தில் வி.எஸ்.ஆர்.நகர் ரேஷன் கடையில் உள்ள சுமார் 300 குடும்ப அட்டைகள் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் , வீடுகளுக்கு எந்த அதிகாரிகளும் வராமலும் குடும்ப அட்டைகளை நீக்கப்பட்டதை கண்டித்தும், நீக்கப்பட்ட அட்டைகளுக்கு உடனடியாக பொருட்கள் வழங்க வலியுறுத்தியும், விசாரணை இல்லாமல் குடும்ப அட்டையை நீக்கிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிதம்பரம் தாசில்தார் அலுவலகம் முன்பு குடும்ப அட்டையுடன் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    
                         உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் 28ம் தேதி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு போராட் டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.இதே போன்று நெய் வேலி டவுன் ஷிப்பில் வட்டம் 2 ல் உள்ள ரேஷன் கடையில் என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் பிளாக்-1 சிலோன் குவார்ட்ரஸ் குடியிருப்பில் பொதுமக்கள் கார்டுகள் நீக்கப்பட்டதால் முற்றுகையிட்டனர். 

                           பிரச்னைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வரும் 25ம் தேதி ரேஷன் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.

Read more »

மகள் இறப்பில் சந்தேகம் பெரியம்மா போலீசில் புகார்

திட்டக்குடி :

                  மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெரியம்மா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  திட்டக்குடி அடுத்த சாத்தநத்தத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி சத்யா (22). திருமணமாகி ஐந்தாண்டு ஆகும் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்யா நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தூக்கு போட்டு இறந்ததாக கூறி, மாலை 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டார்.

                   இதனை அறிந்த சத்யாவின் பெரியம்மா மீனாட்சி, தனது தங்கை மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

இரு இடங்களில் விபத்து கார் டிரைவர் கைது

காட்டுமன்னார்கோவில் :

                   சிதம்பரத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்றபோது இரு இடங்களில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் இந் திரா நகரை சேர்ந்தவர் அசோகன் (46). டிரைவரான இவர் நேற்று மாலை சிதம்பரத்தில் இருந்து ஜெயங் கொண்டத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். தவர்த் தாம்பட்டு அருகே சென்றபோது மல்லிகா என்பவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

                 இதில் படுகாயமடைந்த மல்லி காவை சிதம்பரம் அரசு மருத் துவனையில் சேர்த்தனர். அதே கார் சிறகிழந்தநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர்களில் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவும் பலத்த காயமும் ஏற்பட்டது. தகவல் அறிந்த வீரநத்தம் கிராம மக்கள் அந்த காரை நிறுத்த முயன்றனர். கார் நிற்காமல் சென்றது. தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் கடைவீதியில் காரை மடக்கி பிடித்து டிரைவர் அசோகனை கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior