உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

சிதம்பரம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை ரேஷன் கார்டுகள் நீக்கத்தால் திடீர் பரபரப்பு

சிதம்பரம் :

                        முறைகேடாக நீக்கப் பட்ட குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க கோரி கிராம மக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

                        சிதம்பரம் அடுத்த பரமேஸ்வரநல்லூர் கிராமத்தில் வி.எஸ்.ஆர்.நகர் ரேஷன் கடையில் உள்ள சுமார் 300 குடும்ப அட்டைகள் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் , வீடுகளுக்கு எந்த அதிகாரிகளும் வராமலும் குடும்ப அட்டைகளை நீக்கப்பட்டதை கண்டித்தும், நீக்கப்பட்ட அட்டைகளுக்கு உடனடியாக பொருட்கள் வழங்க வலியுறுத்தியும், விசாரணை இல்லாமல் குடும்ப அட்டையை நீக்கிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிதம்பரம் தாசில்தார் அலுவலகம் முன்பு குடும்ப அட்டையுடன் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    
                         உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் 28ம் தேதி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு போராட் டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.இதே போன்று நெய் வேலி டவுன் ஷிப்பில் வட்டம் 2 ல் உள்ள ரேஷன் கடையில் என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் பிளாக்-1 சிலோன் குவார்ட்ரஸ் குடியிருப்பில் பொதுமக்கள் கார்டுகள் நீக்கப்பட்டதால் முற்றுகையிட்டனர். 

                           பிரச்னைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வரும் 25ம் தேதி ரேஷன் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior