உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

மகள் இறப்பில் சந்தேகம் பெரியம்மா போலீசில் புகார்

திட்டக்குடி :

                  மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெரியம்மா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  திட்டக்குடி அடுத்த சாத்தநத்தத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி சத்யா (22). திருமணமாகி ஐந்தாண்டு ஆகும் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்யா நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தூக்கு போட்டு இறந்ததாக கூறி, மாலை 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டார்.

                   இதனை அறிந்த சத்யாவின் பெரியம்மா மீனாட்சி, தனது தங்கை மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior