உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

இரு இடங்களில் விபத்து கார் டிரைவர் கைது

காட்டுமன்னார்கோவில் :

                   சிதம்பரத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்றபோது இரு இடங்களில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் இந் திரா நகரை சேர்ந்தவர் அசோகன் (46). டிரைவரான இவர் நேற்று மாலை சிதம்பரத்தில் இருந்து ஜெயங் கொண்டத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். தவர்த் தாம்பட்டு அருகே சென்றபோது மல்லிகா என்பவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

                 இதில் படுகாயமடைந்த மல்லி காவை சிதம்பரம் அரசு மருத் துவனையில் சேர்த்தனர். அதே கார் சிறகிழந்தநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர்களில் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவும் பலத்த காயமும் ஏற்பட்டது. தகவல் அறிந்த வீரநத்தம் கிராம மக்கள் அந்த காரை நிறுத்த முயன்றனர். கார் நிற்காமல் சென்றது. தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் கடைவீதியில் காரை மடக்கி பிடித்து டிரைவர் அசோகனை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior