உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

வீராணத்தில் வெள்ள பாதிப்பு தடுக்கதலைமை பொறியாளர் நேரில் ஆய்வு

காட்டுமன்னார்கோவில்:

                  வெள்ள பாதிப்பை தடுக்க கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பாசன பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் ஒவ் வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க பல்வேறு நிலையில் ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீராணம் ஏரியின் மேற்கு கரை பலப்படுத்துதல், பாசன வாய்க்கால்கள் தூர் வாருதல் மற்றும் பாழ்வாய்க் கால் ஷட்டர் அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
                        அதே போல் கொள்ளிடம் ஆற்றின் கரைகள் பலப் படுத்தி தடுப்பணைகள் கட்ட 120 கோடி ரூபாயிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதன்பேரில் வீராணம், கொள்ளிடம் மற்றும் வெலிங்டன் ஏரி பகுதிகளை பாசன பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கோட்ட பொறியாளர் நஞ்சன், அணைக் கரை செயற்பொறியாளர் பெரியசாமி, சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வராஜ், வீராணம் உதவி பொறியாளர் சரவணன், மாணிக்கம், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read more »

விருத்தாசலம் அருகே வயலில் புத்தர் சிலை கண்டெடுப்பு

விருத்தாசலம்:

                   விருத்தாசலம் அருகே வயலில் கிடந்த பழங்கால கருங்கல்லால் ஆன புத்தர் சிலையை விவசாயிகள் கண்டெடுத்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தில் பெருமாள் கோவில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதே பகுதியைச்சேர்ந்த வேல்சாமி, முருகேசன் இருவரது நிலங்களின் வரப்பில் 5 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட பழைய கருங்கல் கிடந்தது. அந்த கல்லை, கோவிலுக்கு எடுத்து சென்று போடலாம் என நினைத்த அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல், அய்யம்பெருமாள், நாராயணன் ஆகியோர் திருப்பியபோது, புத்தர் சிலை என தெரியவந்தது.பின்னர் ஊராட்சித் தலைவர் மதியழகன், வி.ஏ.ஓ., தண்டபாணிக்கு தகவல் கொடுத்தார். ஆர்.ஐ., ஜெயந்தி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் புத்தர் சிலையை பார்வையிட்டு சென்றனர்.

Read more »

வெறிநாய்கள் துரத்திய மான் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சம்

சிறுபாக்கம்:

                       வேப்பூர் அருகே வெறிநாய்கள் துரத்தியதால் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சம் அடைந்த புள்ளி மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டு ரோடு பெரியநெசலூர் பகுதியில் அரசு காப்பு காடு உள்ளது. இங்கு மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. நேற்று மதியம் புள்ளி மான் ஒன்று காட்டை விட்டு வெளியேறி வேப்பூர் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்திற்கு வந்தது. அதனைக் கண்ட அங்கிருந்த வெறி நாய்கள் துரத்தின. அதில் மிரண்ட புள்ளி மான் வெகுதூரம் ஓடி வேப்பூர் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சமடைந்தது.அதனை நிலைய அதிகாரி ஆறுமுகம், தீயணைப்பு வீரர்கள் கணேசன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பிடித்து வனவர்கள் ஏகாம்பரம், தில்லைக்கோவிந்தனிடம் ஒப்படைத்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior