உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

விருத்தாசலம் அருகே வயலில் புத்தர் சிலை கண்டெடுப்பு

விருத்தாசலம்:

                   விருத்தாசலம் அருகே வயலில் கிடந்த பழங்கால கருங்கல்லால் ஆன புத்தர் சிலையை விவசாயிகள் கண்டெடுத்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தில் பெருமாள் கோவில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதே பகுதியைச்சேர்ந்த வேல்சாமி, முருகேசன் இருவரது நிலங்களின் வரப்பில் 5 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட பழைய கருங்கல் கிடந்தது. அந்த கல்லை, கோவிலுக்கு எடுத்து சென்று போடலாம் என நினைத்த அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல், அய்யம்பெருமாள், நாராயணன் ஆகியோர் திருப்பியபோது, புத்தர் சிலை என தெரியவந்தது.பின்னர் ஊராட்சித் தலைவர் மதியழகன், வி.ஏ.ஓ., தண்டபாணிக்கு தகவல் கொடுத்தார். ஆர்.ஐ., ஜெயந்தி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் புத்தர் சிலையை பார்வையிட்டு சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior