உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

வீராணத்தில் வெள்ள பாதிப்பு தடுக்கதலைமை பொறியாளர் நேரில் ஆய்வு

காட்டுமன்னார்கோவில்:

                  வெள்ள பாதிப்பை தடுக்க கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பாசன பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் ஒவ் வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க பல்வேறு நிலையில் ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீராணம் ஏரியின் மேற்கு கரை பலப்படுத்துதல், பாசன வாய்க்கால்கள் தூர் வாருதல் மற்றும் பாழ்வாய்க் கால் ஷட்டர் அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
                        அதே போல் கொள்ளிடம் ஆற்றின் கரைகள் பலப் படுத்தி தடுப்பணைகள் கட்ட 120 கோடி ரூபாயிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதன்பேரில் வீராணம், கொள்ளிடம் மற்றும் வெலிங்டன் ஏரி பகுதிகளை பாசன பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கோட்ட பொறியாளர் நஞ்சன், அணைக் கரை செயற்பொறியாளர் பெரியசாமி, சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வராஜ், வீராணம் உதவி பொறியாளர் சரவணன், மாணிக்கம், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior