உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

வெறிநாய்கள் துரத்திய மான் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சம்

சிறுபாக்கம்:

                       வேப்பூர் அருகே வெறிநாய்கள் துரத்தியதால் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சம் அடைந்த புள்ளி மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டு ரோடு பெரியநெசலூர் பகுதியில் அரசு காப்பு காடு உள்ளது. இங்கு மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. நேற்று மதியம் புள்ளி மான் ஒன்று காட்டை விட்டு வெளியேறி வேப்பூர் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்திற்கு வந்தது. அதனைக் கண்ட அங்கிருந்த வெறி நாய்கள் துரத்தின. அதில் மிரண்ட புள்ளி மான் வெகுதூரம் ஓடி வேப்பூர் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சமடைந்தது.அதனை நிலைய அதிகாரி ஆறுமுகம், தீயணைப்பு வீரர்கள் கணேசன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பிடித்து வனவர்கள் ஏகாம்பரம், தில்லைக்கோவிந்தனிடம் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior