உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கும் : காங்., தேர்தல் பொறுப்பாளர் உறுதி

கடலூர் : 

            மாவட்ட காங்., கட்சி தேர்தல் பணி தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் கடலூர் நேருபவனில் நடந்தது.  மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். செயலாளர் அலமுதங்கவேல் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி, முன்னாள் மாவட்டத்தலைவர் ராதாகிருஷ்ணன், புவனகிரி சேர்மன் தனலட்சுமி, ராமலிங்கம், வக்கீல் சந்திரசேகர், பண்ருட்டி மணி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், தேர்தலை சமரச முறையில் நடத்துவதா அல்லது போட்டியிட்டு தேர்வு செய்வதா என நிர்வாகிகளை கேட்டதற்கு, போட்டியிட்டு தேர்வு செய்வதே சிறந்தது என நிர்வாகிகள் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷ், ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கும் என உறுதியளித்தார். நகரத்தலைவர் ரகுபதி நன்றி கூறினார்.

Read more »

குறிஞ்சிப்பாடி இளைஞர் காங்., முதல்வருக்கு பாராட்டு

கடலூர் : 

          குறிஞ்சிப்பாடியை தாலுக்காவாக உருவாக்கிய முதல்வர் மற்றும் மாவட்ட அமைச்சருக்கு இளைஞர் காங்., நன்றி தெரிவித்துள்ளது. குறிஞ்சிப்பாடி நகர இளைஞர் காங்., கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. முன்னாள் நகர இளைஞர் காங்., தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். முத்துகுமரசாமி வரவேற்றார். செந் தில்குமார், குமார், சீனுவாசன், ரமேஷ், சிவராஜ், சண்முகம் முன் னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வைத்தியநாதன், வி.எஸ். வைத்தியநாதன், செல்வமணி, தணிகாசலம் பேசினர்.காங்., கட்சியில் ஜனநாயகத்தை ஏற்படுத்த தேர்தல் நடத்த உத்தரவிட்ட ராகுலுக்கு நன்றி தெரிவிப்பது, குறிஞ்சிப்பாடியை தனி தாலுகா வாக உருவாக்கிய முதல் வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கும், ஏழை மாணவர்களுக்காக கடலூரில் கல்விக் கடன் மேளா நடத்திய மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

அதிக பயணிகளை ஏற்றிய 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

கடலூர் : 

                கடலூரில் அதிக பயணிகள் ஏற்றிச் சென்ற 30 ஷேர் ஆட்டோ ஓட்டுனர் கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கடலூர் புதுநகர் இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்ற 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்து ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

                இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் கூறுகையில் "ஷேர் ஆட் டோக்களில் பள்ளிக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் கூட் டம் அதிகமாக உள்ள ஆட் டோக்களில் ஏற்றி அனுப்ப வேண்டாம். பெற்றோர் கள் ஒத்துழைத்தால் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் அபய் ஆட்டோக்களில் அதிகளவில் மாணவர்கள் ஏற்றிச் செல்வதை தவிர்க்கலாம். இனி நகர்புறத்தில் அடிக்கடி திடீர் சோதனை மேற் கொண்டு விதிமுறை மீறும் வாகனங்கள் மீது வழக்குப் பதியப்படும்' என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior