உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

அதிக பயணிகளை ஏற்றிய 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

கடலூர் : 

                கடலூரில் அதிக பயணிகள் ஏற்றிச் சென்ற 30 ஷேர் ஆட்டோ ஓட்டுனர் கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கடலூர் புதுநகர் இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்ற 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்து ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

                இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் கூறுகையில் "ஷேர் ஆட் டோக்களில் பள்ளிக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் கூட் டம் அதிகமாக உள்ள ஆட் டோக்களில் ஏற்றி அனுப்ப வேண்டாம். பெற்றோர் கள் ஒத்துழைத்தால் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் அபய் ஆட்டோக்களில் அதிகளவில் மாணவர்கள் ஏற்றிச் செல்வதை தவிர்க்கலாம். இனி நகர்புறத்தில் அடிக்கடி திடீர் சோதனை மேற் கொண்டு விதிமுறை மீறும் வாகனங்கள் மீது வழக்குப் பதியப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior