உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

இளைஞர் காங்., தேர்தல் புவனகிரியில் 874 பேர் போட்டி

புவனகிரி : 

                   புவனகிரி தொகுதியில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் 874 பேர் போட்டியிடுகின்றனர். புவனகிரி தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட கடந்த 2ம் தேதி மனுக்கள் பெறப்பட்டது. அகில இந்திய இளைஞர் காங், தேர்தல் ஆணைய அலுவலர் அனூப் தலைமையில் புவனகிரி தொகுதி தேர்தல் அலுவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட குழுவினர் மனுக்ளை பெற்றனர். தேர்தலில் போட்டியிட  ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனுதாக்கல் செய்தனர். பரிசீலனை முடிந்து 874  பேர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 6ம் தேதியிலிருந்து 11ம் தேதி வரை சேத்தியாத்தோப்பு ஜே.கே. திருமணமண்டபத்தில் நடக்கிறது. புவனகிரி தொகுதி இளைஞர்காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தொகுதிக்குட்பட்ட  மேல்புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 152 கிராம ஊராட்சிகளில் இருந்து 882 மனுக்களும், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலிருந்து 49 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதில் கிராம பஞ்சாயத்திற்கு தலா 5 நிர்வாகிகளும், பேரூராட்சி பகுதிக்கு தலா 10 புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Read more »

காமன்வெல்த் போட்டியில் வெற்றி மாணவிக்கு பாராட்டு விழா

கடலூர் : 

                    சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஏ.ஆர்.எல்.எம்., மெட்ரிக் பள்ளி மாணவிக்கு ஜூனியர் சேம்பர் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
 
                 பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஜூனியர் சேம்பர்  தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மண்டல  தலைவர் பாலசுப்ரமணியன் யோகா போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற 6ம் வகுப்பு மாணவி அஜித்தா மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் பிரேமா   ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மண்டல  துணை  தலைவர் கார்த்திகேயன், சென் சாய் கிருஷ்ணன், பாபுதனேஷ்வரன், ரயில்வே சங்க  இணை செயலாளர் ராஜன், தெற்கு ரயில்வே ஆலோசனை குழு  உறுப்பினர் சிவக்குமார் உட்பட  பலர் பங்கேற்றனர்.ஜூனியர் சேம்பர் செயலாளர் சிவக்குமார் நன்றி  கூறினார்.

Read more »

.தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிதம்பரம் :  

                     தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பாராட்டி பரிசு வழங்கினார். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பரங்கிப் பேட்டை கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் சார்பில் பல்வேறுப் போட்டிகள்  நடத்தப் பட்டது. இதில் அண்ணாமலைநகர் ராணி சீதையாச்சி மேல்நிலைப் பள்ளி  8ம் வகுப்பு மாணவி நசிரின் பானு கண்காட்சியிலும்,  பிளஸ் 1 மாணவர் பிரவின் ஓவியப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றனர்.மாணவர்களை போட்டியில் பங்கேற்க  ஊக்கப் படுத்திய ஆசிரியர்கள் ஷாஜாதீபி, சரவணன், ஜோசபின் தேவ கிருமை, பியர்லின் வில்லியம்ஸ், சசிகலாதேவி ஆகியோர் களை அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந் தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் பாராட்டி பரிசுகள் வழங்கினர். கண்காட்சியில் எடைமேடைக்கு செல்லாமல் லாரியில் உள்ள எடையை கண்டறியும் முறை குறித்து மாணவி நசிரின் பானு வடிவமைத்திருந்த படைப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior