உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

இளைஞர் காங்., தேர்தல் புவனகிரியில் 874 பேர் போட்டி

புவனகிரி : 

                   புவனகிரி தொகுதியில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் 874 பேர் போட்டியிடுகின்றனர். புவனகிரி தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட கடந்த 2ம் தேதி மனுக்கள் பெறப்பட்டது. அகில இந்திய இளைஞர் காங், தேர்தல் ஆணைய அலுவலர் அனூப் தலைமையில் புவனகிரி தொகுதி தேர்தல் அலுவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட குழுவினர் மனுக்ளை பெற்றனர். தேர்தலில் போட்டியிட  ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனுதாக்கல் செய்தனர். பரிசீலனை முடிந்து 874  பேர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 6ம் தேதியிலிருந்து 11ம் தேதி வரை சேத்தியாத்தோப்பு ஜே.கே. திருமணமண்டபத்தில் நடக்கிறது. புவனகிரி தொகுதி இளைஞர்காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தொகுதிக்குட்பட்ட  மேல்புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 152 கிராம ஊராட்சிகளில் இருந்து 882 மனுக்களும், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலிருந்து 49 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதில் கிராம பஞ்சாயத்திற்கு தலா 5 நிர்வாகிகளும், பேரூராட்சி பகுதிக்கு தலா 10 புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior