உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

காமன்வெல்த் போட்டியில் வெற்றி மாணவிக்கு பாராட்டு விழா

கடலூர் : 

                    சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஏ.ஆர்.எல்.எம்., மெட்ரிக் பள்ளி மாணவிக்கு ஜூனியர் சேம்பர் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
 
                 பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஜூனியர் சேம்பர்  தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மண்டல  தலைவர் பாலசுப்ரமணியன் யோகா போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற 6ம் வகுப்பு மாணவி அஜித்தா மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் பிரேமா   ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மண்டல  துணை  தலைவர் கார்த்திகேயன், சென் சாய் கிருஷ்ணன், பாபுதனேஷ்வரன், ரயில்வே சங்க  இணை செயலாளர் ராஜன், தெற்கு ரயில்வே ஆலோசனை குழு  உறுப்பினர் சிவக்குமார் உட்பட  பலர் பங்கேற்றனர்.ஜூனியர் சேம்பர் செயலாளர் சிவக்குமார் நன்றி  கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior