உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

நின்ற பஸ் மீது லாரி மோதல் டிரைவர் உட்பட மூவர் காயம்

திட்டக்குடி :

               பயணிகளை இறக்கி விட நின்ற பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

                    நேற்று காலை விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி நோக்கி வந்த அரசு டவுன் பஸ், வெண்கரும்பூரில் பயணிகளை இறக்கிவிட நின்றது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சின் வலதுபுறத்தில் மோதியது. அதில், அரசு பஸ் டிரைவர் மணிவண்ணன், கண்டக்டர் ரவிச்சந்திரன் (43), பயணி சத்தியவாடி சின்னசாமி மனைவி தவமணி (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்து குறித்து பெண்ணாடம் இன்ஸ் பெக்டர் ஸ்ரீதரன், சப்- இன்ஸ்பெக்டர் கோவிந் தன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Read more »

மத்தி மீன் அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி

கடலூர் :

            கடலூர் முதுநகரில் மத்தி மீன்கள் வரத்து  அதிகரித் துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

                  கடலூர் முதுநகர் பகுதி மீனவர்கள் நேற்று அதிகாலை வழக்கம்போல கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.  மீனவர் வலையில் மத்தி மீன்கள் பாடு அதிகளவில் இருந்தது. கேரளப் பகுதியில் விரும்பி சாப்பிடும் மத்தி மீன்கள் உடனடியாக லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன. கோழித்தீவனத்திற்கு பயன்படுத்துவதற்காக வியாபாரிகளும் போட்டிப்போட்டு மத்தி மீனை  வாங்கினர். நேற்று ஒரு பாக்ஸ் மத்தி மீன் 650 ரூபாய் முதல் 680 வரை விலைபோனது. பெரிய வகை மீன்களும் நேற்று மீனவர் வலையில் சிக்கின.

Read more »

ஆர்ப்பாட்டம்


சிதம்பரம் : 

                  ஊதிய உயர்வு கோரி எல்.ஐ.சி., ஊழியர்கள் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 2007முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் எல்.ஐ.சி., அலுவலகம் எதிரில் எல்.ஐ.சி., ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior