உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

நின்ற பஸ் மீது லாரி மோதல் டிரைவர் உட்பட மூவர் காயம்

திட்டக்குடி :

               பயணிகளை இறக்கி விட நின்ற பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

                    நேற்று காலை விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி நோக்கி வந்த அரசு டவுன் பஸ், வெண்கரும்பூரில் பயணிகளை இறக்கிவிட நின்றது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சின் வலதுபுறத்தில் மோதியது. அதில், அரசு பஸ் டிரைவர் மணிவண்ணன், கண்டக்டர் ரவிச்சந்திரன் (43), பயணி சத்தியவாடி சின்னசாமி மனைவி தவமணி (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்து குறித்து பெண்ணாடம் இன்ஸ் பெக்டர் ஸ்ரீதரன், சப்- இன்ஸ்பெக்டர் கோவிந் தன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior