உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 08, 2010

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு அமைக்கும் பணி துவக்க விழா

சிதம்பரம்: 

                    இரண்டு ஆண்டுகளாக இருண்டு கிடந்த ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.  சிதம்பரம் நகரில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி  திறக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்டும் மின் விளக்கு வசதி செய்யப்படாமல் இருளில் மூழ்கி கிடந்தது. மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் முயற்சியால் விளக்கு அமைக்கும் பணிக்கு 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

                     மின் விளக்கு அமைக்கும் பணியின் துவக்க விழா நேற்று சிதம்பரத்தில் நடந்தது. நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கோட்டப்பொறியாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராமராஜ் மின் விளக்கு அமைக்கும் பணியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். உதவி கோட்ட பொறியாளர் சீனுவாசன், மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர், தாசில்தார் காமராஜ், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Read more »

அண்ணாமலை தொலைதூர கல்வி இயக்ககத்தில் திரைப்பட தொழில் நுட்ப கல்வி துவக்கம்

சிதம்பரம்: 

                 அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்ககத்தில் திரைப்பட தொழில்நுட்ப கல்வி துவக்க விழா நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் ஹைதராபாத் ஜீவன் ஸாப்டெக் சார்பில் திரைப் பட தொழில் நுட்பம் சார்ந்த கல்வியை துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.  

                  ஹைதராபாத் தாஜ் டெக்கான் ஹோட்டலில் நடந்த விழாவிற்கு அமைச்சர் புரந்தேஷ்வரி தலைமை தாங்கி  துவக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். 

விழாவில் அமைச்சர் புரந்தேஷ்வரி கையேட்டை வெளியிட்டு பேசுகையில், 

                          உயர்கல்வி விகிதத்தை இந்தியாவில் உயர்த்த வேண்டியது அவசியம். இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு தேவையான கல்வி தருவதற்கு கல்லூரிகளோ, பல்கலைக்கழகங்க ளோ இல்லை.  அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், ஜீவன் ஸாப்ட் டெக்கும் இணைந்து வழங்கும் திரைப்பட தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளை வழங்குவது பாராட்டுக்குறியது என்றார். 

                     பல்கலைக்கழக துணை வேந்தர் ராமநாதன் பேசுகையில், திரைப்படம் என்பது ஒரு முக்கிய கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சமாகும். சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் வெளிப்படுத்துவதாகவும், அது ஒரு தொழில் துறையாகவும் முன்னனேற்றம் அடைந்துள்ளது.  திரைப் பட துறையில் எல்லா அம்சங்களையும் கல்வி சார்ந்து வடிவமைக் கப்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஹைதராபாத்தில் உள்ள ஜீவன் ஸாப்ட்டெக்குடன் புரிந் துண்வு ஒப்பந்த முறையில் எம்.பி.ஏ., பி.பி.ஏ., மீடியா மேனேஜ்மெண்ட் மற்றும் திரைப்பட தொழில் நுட்பத்தில் பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளை இந்த கல்வி ஆண்டு முதல் வழங்க இருக்கிறது. 

                     தொலைதூரக்கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், திரைப்பட தயாரிப்பாளர் தம்மாரெட்டி பரத் வாஜா, நடிகர் சலபதிராவ், லாபிங் லயன்ஸ் அனிமேஷன் ஸ்டுடியோ தலைவர் ஸ்ரீகாந்த், ஜீவன் ஸாப்ட் டெக் தலைவர் சீத்தாராமய்யர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

வெள்ளம்- வறட்சியில் பாதுகாக்க விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வது மிக அவசியம்: வேளாண் இயக்குனர் அறிக்கை

கடலூர்:
  
கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

                             கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி துரிதகதியில் நடைபெற்று, இதுவரை சுமார் 30 ஆயிரம் எக்டரில் நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில் சுமார் 97 ஆயிரம் எக்டரில் சம்பா சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                      ஆண்டுதோறும் அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை பெய்யும் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள், மகசூல் இழப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பயிர் காப்பீடு செய்வது மிக அவசியம். இதற்கென தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தினை தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகள் இத்திட்டத்தில் தங்களை பதிவு செய்து தேவையான காப்பீடு பிரிமியத்தினை உரிய படிவத்துடன் கூட்டுறவு வங்கிகளிலோ, தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளிலோ செலுத்த வேண்டும். கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த வங்கிகளிலேயே பிரிமியத் தொகை வசூல் செய்யப்படும்.

                   கடன் பெறாத விவசாயிகள் காப்பீட்டுத் தொகையில் 2 சதவீத தொகையினை பிரிமியமாக செலுத்த வேண்டும். இதில் தமிழ்நாடு அரசால் 50 சதவீதம் இதர விவசாயிகளுக்கும் 55 சதவீதம் சிறு,குறு விவசாயிகளுக்குமான பிரிமியத் தொகை மானியமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது.
அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.13024 காப்பீடு செய்யவிரும்பும் கடன் பெறாத சிறு,குறு விவசாயிகள் 117 ரூபாயும் இதர விவசாயிகள் 130 ரூபாயும் பிரிமியமாக செலுத்த வேண்டும். கடன் பெறம் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பிரிமியத் தொகை ஏக்கருக்கு 130 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

                       இந்த தொகையினை 15.12.2010-க்குள் உரிய படிவத்துடன் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ விவசாயிகள் செலுத்தி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான படிவம் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கிடைக்கும். இது குறித்து மேலும் விவரங்கள் பெற விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior