உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 08, 2010

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு அமைக்கும் பணி துவக்க விழா

சிதம்பரம்: 

                    இரண்டு ஆண்டுகளாக இருண்டு கிடந்த ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.  சிதம்பரம் நகரில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி  திறக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்டும் மின் விளக்கு வசதி செய்யப்படாமல் இருளில் மூழ்கி கிடந்தது. மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் முயற்சியால் விளக்கு அமைக்கும் பணிக்கு 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

                     மின் விளக்கு அமைக்கும் பணியின் துவக்க விழா நேற்று சிதம்பரத்தில் நடந்தது. நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கோட்டப்பொறியாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராமராஜ் மின் விளக்கு அமைக்கும் பணியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். உதவி கோட்ட பொறியாளர் சீனுவாசன், மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர், தாசில்தார் காமராஜ், அலுவலர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior