உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

சாலை​களை வீட்டு மனை​க​ளாக விற்க உயர்​ நீ​தி​மன்​றம் தடை

கட​லூர்,​ நவ. 29:​


கட​லூ​ரில் அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட மனைப் பிரி​வில் உள்ள சாலை​களை,​ வீட்டு மனை​க​ளா​கப் பிரித்து விற்​பனை செய்ய சென்னை உயர்​நீ​தி​மன்​றம் இடைக்​கா​லத் தடை விதித்து உள்​ளது. ​க​ட​லூர் அருகே நத்​தப்​பட்டு ஊராட்​சிக்கு உள்​பட்ட பெண்ணை கார்​டன் என்ற மனைப் பிரிவு 15 ஆண்​டு​க​ளுக்கு முன் உரு​வாக்​கப்​பட்​டது. இதில் 200க்கும் மேற்​பட்ட வீட்​டு​ம​னை​கள் விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ளன.இந்த நிலை​யில் 2003, 2004, 2008-ம் ஆண்​டு​க​ளில் இந்த மனைப் பிரி​வில் பொதுப் பயன்​பாட்​டுக்​கான சாலை​க​ளாக அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட இடங்​கள்,​ 4 நபர்​க​ளுக்கு வீட்​டு​ம​னை​க​ளாக விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ள​தாம். இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து பெண்ணை கார்​டன் நலச் சங்​கத் தலை​வர் ஜி.சம்​பந்​தம் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம்,​ கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம்,​ காவல்​துறை ஆகி​ய​வற்​றில் பல​முறை மனு கொடுத்​தும் நட​வ​டிக்கை எடுக்​க​வில்​லை​யாம். ​எ​னவே சம்​பந்​தம் இது​கு​றித்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார். சாலை ​களை வீட்டு மனை​க​ளாக விற்​ப​தற்​கும்,​ அவற்​றில் கட்​டு​மா​னப் பணி​களை மேற்​கொள்​வ​தற்​கும் தடை​வி​திக்க மனு​வில் கோரி இருந்​தார். வழக்கை நீதி​பதி பி.ஜோதி​மணி அண்​மை​யில் விசா​ரித்து இடைக்​கா​லத் தடை விதித்​தார். மேலும் இது தொடர்​பாக மாவட்ட ஆட்​சி​யர்,​ நகர மற்​றும் ஊரக திட்ட உதவி இயக்​கு​நர்,​ கோட்​டாட்​சி​யர்,​ வட்​டாட்​சி​யர்,​ வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்,​ நத்​தப்​பட்டு ஊராட்சி மன்​றத் தலை​வர்,​ ஜோதி நகர் மின்​வா​ரிய உத​விப் பொறி​யா​ளர் ஆகி​யோ​ருக்கு நோட்​டீஸ் அனுப்​ப​வும் நீதி​பதி உத்​த​ர​விட்​டார்.​

Read more »

தமிழ், கல்வி, வேளாண்​மைக்கு முன்​னு​ரிமை

சிதம்ப​ரம்,​ நவ,​ 29:​


தமிழ்​மொழி,​ கல்வி,​ வேளாண்மை ஆகிய மூன்று துறை​க​ளுக்கு தின​மணி நாளி​த​ழில் முன்​னு​ரிமை அளிக்​கப்​ப​டும் என ஆசி​ரி​யர் கே.வைத்​திய​நா​தன் தெரிவித்தார். பவழ விழா கொண்டாடி வரும் தினமணி நாளிதழ், சிதம்​ப​ரம், ஹோட்டல் சார​தா​ராமில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாச​கர் சந்​திப்பு நிகழ்ச்சியில் அவர் ​ பேசி​யது:​

வா​ச​கர்​கள் ஆசி​ரி​யரை சந்​திப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஆசி​ரி​யர் வாச​கர்​களை சந்​திப்​ப​தில் பெரு​மை​யா​கக் கரு​து​கி​றேன். எழுத்து என்​பது சமு​தா​யத்​தில் தாக்​கத்தை ஏற்​ப​டுத்​தக்​கூ​டி​ய​தா​க​வும்,​நாளைய சமு​தா​யத்​திற்கு பய​னு​டை​ய​தா​க​வும் இருக்​க​வேண்​டும். அப்​படி இல்​லை​யெ​னில் அர்த்​தம் இருக்​காது. பொழு​தைத்​தான் வீண​டிக்​கும். எ​னவே,​ எழு​து​கின்ற எழுத்​தின் உயிர்ப்​பும்,​ சிந்​த​னையை தட்டி எழுப்​பு​கின்ற கருத்​துக​ளும் இருக்​க​வேண்​டும். அர​சுக்​கும் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும் எதி​ரான கருத்​துகளை பதி​வு​செய்​வது எங்​க​ளது நோக்​க​மல்ல. பத்​தி​ரிகை என்​பது தவ​று​களைச் சுட்​டிக்​காட்​டு​கின்ற கண்​ணாடி. அப்​போ​து​தான் சமு​தா​யத்​திற்கு பயன் ஏற்​ப​டும். தவறை திருத்​தக் கூடிய பொறுப்​பில் உள்ள ​ ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும்,​ நிர்​வா​கத்​திற்​கும் பல லட்​சம் சம்​ப​ளம் வழங்​கப்​ப​டு​கி​றது. அந்த நிர்​வா​கத்​தி​னர் தவறை திருத்​த​வேண்​டும். அதன் மூலம் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும்,​ நிர்​வாக இயந்தி​ரத்​திற்​கும் நற்​பெ​யர் கிடைக்​கும் என கரு​து​வ​தால்,​ சமு​தா​யத்​திற்கு பயன்​ப​டும் கரு​வி​யாக தின​மணி செயல்​ப​டு​கி​றது. நாளைய ஆட்​சி​யா​ளர்​கள் மாறி​னா​லும்,​ தின​மணி கண்​ணா​டி​யா​கத் தான் இருக்​கும். ச​மு​தா​ யத்​தில் நடை​பெ​றும் தவ​று​கள் களை​யப்​ப​ட​வேண்​டும் என்ற நல்ல எண்​ணத்​து​டன் தின​மணி செயல்​ப​டு​கி​றது. நாளைய சமு​தா​யத் தலை​மு​றை​யி​னர் நன்​மைக் கருதி அவர்​க​ளுக்கு சிந்​த​னைத் தாக்​கத்தை ஏற்​ப​டுத்​தும் பணியை தின​மணி செய்​கி​றது.÷வி​வ​சா​யம் குறைந்​து​வ​ரு​வது அச்​சத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது.தன்​னி​றைவு தான் ஒரு நாட்​டின் பாது​காப்பு என்​பது முன்​னோர்​கள் கண்​ட​றிந்த விஷ​யம்.விவ​சா​யம் திட்​ட​மிட்டு அழிக்​கப்​பட்​டு​வ​ரு​வ​தாக கரு​து​கி​றேன். இதற்கு முன்​னேற்​பாடு தான் தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டம். இதைப்​பற்றி சிந்​திக்​க​வேண்​டிய கடமை உள்​ளது.÷உயர் ​கல்வி பயில மாண​வர்​களை தயார்​ப​டுத்த ​வேண்​டும் என்​ப​தற்​காகத்தான் தின​ம​ணி​யில் கல்​விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​ப​டு​கி​றது.​ ​ முது​பெ​ரும் தலை​வர் ஜே.சி. கும​ரப்​பாவை மத்​திய,​ மாநில அர​சு​கள் மற்​றும் காங்​கி​ரஸ் கட்சி உள்​ளிட்ட அனை​வ​ரும் மறந்​து​விட்ட நிலை​யில் அவ​ரது பொன்​விழா நினைவு நாளை தின​மணி சார்​பில் கொண்​டா​ட​வுள்​ளோம் என்​றார் ஆசி​ரி​யர் வைத்​திய​நா​தன். முன்​னாள் அமைச்​சர் வி.வி.சாமி​நா​தன்,​ அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஓய்​வு​பெற்ற தமிழ்த்​துறைப் பேரா​சி​ரி​யர்​கள் ஆனந்​த​ந​ட​ராஜ தீட்​சி​தர்,​ முன்​னாள் அர​சி​யல் அறி​வி​யல் துறைத் தலை​வர் ஏ.சண்​மு​கம்,​ தமிழ்​தே​சிய பொது​வு​டை​மைக் கட்சி ஒருங்​கி​ணைப்​பா​ளர் கி.வெங்​கட்​ரா​மன்,​அண்​ணா​ம​லைப் பல்​க​லைக் கழக மேலாண் துறைத் தலை​வர் எம்.பஞ்​ச​நா​தன்,​ வர்த்​தக சங்​கத் தலை​வர் எம்.ஆதி​மூ​லம்,​ஆசி​ரி​யர் வாசு,​ ஓய்​வு​பெற்ற வங்கி அதி​காரி மனோ​க​ரன்,​ரோட்​டரி சங்க சமு​தாய இயக்​கு​நர் மணி​வண்​ணன்,​விவ​சாய சங்​கத் தலை​வர் ரவீந்​தி​ரன்,​ வாச​கர்​கள் பாலாஜி கணேஷ்,​ காளி​தாஸ்,​ சித்​தரஞ்​சன்,​ராதா​கி​ரு​ஷ்ணன்,​வழக்​க​றி​ஞர் கே.பால​சுப்​ர​ம​ணி​யன்,​தேவ​ரா​ஜன் உள்​ளிட்​டோர் ​ பங்​கேற்​ற​னர்.

Read more »

மேடைக் கலைப் போட்டி:​ கட​லூர் மாணவி தேர்வு

கட லூர்,​ நவ. 29:​

ஜவ​கர் சிறு​வர் மன்​றம் சார்​பில் நடத்​தப்​பட்ட தென் மண்​டல போட்​டி​க​ளில்,​ மேடைக் கலைப் போட்​டி​யில் கட​லூர் மாணவி சஜீ​வன் ஆர்யா தேர்ந்து எடுக்​கப்​பட்​டார். ​ இ​து​கு​றித்து கட​லூர் மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் சனிக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

க ​ட​லூ​ரில் உள்ள மாவட்ட இசைப் பள்​ளி​யில் ஜவ​கர் சிறு​வர் மன்​றம் இயங்கி வரு​கி​றது. இதில் 150 குழந்​தை​கள் பல்​வேறு கலைப் பயிற்​சி​க​ளில் ஈடு​பட்டு உள்​ள​னர். மன்​றம் வாயி​லாக 9 முதல் 16 வயது வரை​யி​லான மாண​வர்​க​ளுக்கு மாவட்ட அள​வில் போட்​டி​கள் நடத்தி தேர்வு பெற்​ற​வர்​கள் தென்​மண்​டல அள​வி​லான போட்​டிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​னர். க​ட​லூர் மாவட்​டத்​தில் இருந்து சென்ற 4 பேரில் மாணவி சஜீ​வன் ஆர்யா ​(செயின்ட் மேரீஸ் மேல்​நி​லைப் பள்ளி,​ கட​லூர்)​ மேடைக் கலை போட்​டி​யில் தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளார். அவர் புது​தில்​லி​யில் நவம்​பர் 30 முதல் டிசம்​பர் 5-ம் தேதி வரை நடை​பெ​றும் தேசிய அள​வி​லான போட்​டி​யில் பங்​கேற்​பார்,​ இதில் வெற்றி பெறு​வோ​ருக்கு குடி​ய​ர​சுத் தலை​வ​ரால் "இளம்​திரு விருது' வழங்​கப்​ப​டும். சஜீ​வன் ஆர்​யா​வுக்கு மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் பாராட்​டுத் தெரி​வித்​தார் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior