உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

மேடைக் கலைப் போட்டி:​ கட​லூர் மாணவி தேர்வு

கட லூர்,​ நவ. 29:​

ஜவ​கர் சிறு​வர் மன்​றம் சார்​பில் நடத்​தப்​பட்ட தென் மண்​டல போட்​டி​க​ளில்,​ மேடைக் கலைப் போட்​டி​யில் கட​லூர் மாணவி சஜீ​வன் ஆர்யா தேர்ந்து எடுக்​கப்​பட்​டார். ​ இ​து​கு​றித்து கட​லூர் மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் சனிக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

க ​ட​லூ​ரில் உள்ள மாவட்ட இசைப் பள்​ளி​யில் ஜவ​கர் சிறு​வர் மன்​றம் இயங்கி வரு​கி​றது. இதில் 150 குழந்​தை​கள் பல்​வேறு கலைப் பயிற்​சி​க​ளில் ஈடு​பட்டு உள்​ள​னர். மன்​றம் வாயி​லாக 9 முதல் 16 வயது வரை​யி​லான மாண​வர்​க​ளுக்கு மாவட்ட அள​வில் போட்​டி​கள் நடத்தி தேர்வு பெற்​ற​வர்​கள் தென்​மண்​டல அள​வி​லான போட்​டிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​னர். க​ட​லூர் மாவட்​டத்​தில் இருந்து சென்ற 4 பேரில் மாணவி சஜீ​வன் ஆர்யா ​(செயின்ட் மேரீஸ் மேல்​நி​லைப் பள்ளி,​ கட​லூர்)​ மேடைக் கலை போட்​டி​யில் தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளார். அவர் புது​தில்​லி​யில் நவம்​பர் 30 முதல் டிசம்​பர் 5-ம் தேதி வரை நடை​பெ​றும் தேசிய அள​வி​லான போட்​டி​யில் பங்​கேற்​பார்,​ இதில் வெற்றி பெறு​வோ​ருக்கு குடி​ய​ர​சுத் தலை​வ​ரால் "இளம்​திரு விருது' வழங்​கப்​ப​டும். சஜீ​வன் ஆர்​யா​வுக்கு மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் பாராட்​டுத் தெரி​வித்​தார் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior