உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

சாலை​களை வீட்டு மனை​க​ளாக விற்க உயர்​ நீ​தி​மன்​றம் தடை

கட​லூர்,​ நவ. 29:​


கட​லூ​ரில் அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட மனைப் பிரி​வில் உள்ள சாலை​களை,​ வீட்டு மனை​க​ளா​கப் பிரித்து விற்​பனை செய்ய சென்னை உயர்​நீ​தி​மன்​றம் இடைக்​கா​லத் தடை விதித்து உள்​ளது. ​க​ட​லூர் அருகே நத்​தப்​பட்டு ஊராட்​சிக்கு உள்​பட்ட பெண்ணை கார்​டன் என்ற மனைப் பிரிவு 15 ஆண்​டு​க​ளுக்கு முன் உரு​வாக்​கப்​பட்​டது. இதில் 200க்கும் மேற்​பட்ட வீட்​டு​ம​னை​கள் விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ளன.இந்த நிலை​யில் 2003, 2004, 2008-ம் ஆண்​டு​க​ளில் இந்த மனைப் பிரி​வில் பொதுப் பயன்​பாட்​டுக்​கான சாலை​க​ளாக அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட இடங்​கள்,​ 4 நபர்​க​ளுக்கு வீட்​டு​ம​னை​க​ளாக விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ள​தாம். இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து பெண்ணை கார்​டன் நலச் சங்​கத் தலை​வர் ஜி.சம்​பந்​தம் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம்,​ கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம்,​ காவல்​துறை ஆகி​ய​வற்​றில் பல​முறை மனு கொடுத்​தும் நட​வ​டிக்கை எடுக்​க​வில்​லை​யாம். ​எ​னவே சம்​பந்​தம் இது​கு​றித்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார். சாலை ​களை வீட்டு மனை​க​ளாக விற்​ப​தற்​கும்,​ அவற்​றில் கட்​டு​மா​னப் பணி​களை மேற்​கொள்​வ​தற்​கும் தடை​வி​திக்க மனு​வில் கோரி இருந்​தார். வழக்கை நீதி​பதி பி.ஜோதி​மணி அண்​மை​யில் விசா​ரித்து இடைக்​கா​லத் தடை விதித்​தார். மேலும் இது தொடர்​பாக மாவட்ட ஆட்​சி​யர்,​ நகர மற்​றும் ஊரக திட்ட உதவி இயக்​கு​நர்,​ கோட்​டாட்​சி​யர்,​ வட்​டாட்​சி​யர்,​ வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்,​ நத்​தப்​பட்டு ஊராட்சி மன்​றத் தலை​வர்,​ ஜோதி நகர் மின்​வா​ரிய உத​விப் பொறி​யா​ளர் ஆகி​யோ​ருக்கு நோட்​டீஸ் அனுப்​ப​வும் நீதி​பதி உத்​த​ர​விட்​டார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior