உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

விளையாட்டு வீரர்கள் தேர்வில் முறைகேடு : திறமையானவர்கள் புறக்கணிப்பு¬

கடலூர் :

                     மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால், திறமையுள்ள வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாவட்ட அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் டிசம்பர் மாதம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந் தது. இதில் 13 ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங் கேற்றனர். கோ-கோ, கபடி, ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து உட்பட பல போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார் கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.இதில் விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கபடி மற்றும் ஹாக்கி போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். அதே போல் கால்பந்தில் இரண்டாமிடமும், கோ-கோவில் மூன்றாமிடமும் பெற்றனர்.

                    இந்நிலையில் மாநில அளவிலான பைக்கா ஹாக்கி, கபடி போட்டிகள் கரூரில் கடந்த வாரம் நடத்தப்பட்டு தேசிய அள வில் பங்கேற்கும் வீரர் கள் தேர்வும் முடிந்துள்ளது. இதில் பங்கேற்ற கடலூர் மாவட்ட அணிக்கு விருத் தாசலம் அரசு மகளிர் பள் ளியைச் சேர்ந்த ஒரு மாணவிகள்கூட தேர்வு செய்யப் படாமல், சிபாரிசின் அடிப்படையில் வேறு மாணவிகள் தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளனர் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள்.மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவோம் என ஆவலுடன் காத்திருந்த உண்மையான திறமையுடைய விருத்தாசலம் பள்ளி மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.அதே போல் கடலூர் ஒன்றியம் நடுவீரப்பட்டில் நடந்த ஒன்றிய அளவிலான விளையாட்டு போட் டியில் கே.என்., பேட்டை அணி கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்றது.

               ஆனால் இந்த அணியைச் சேர்ந்த வீரர்கள் ஒருவர் கூட கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை கொண்ட அணியே போட் டிகளில் பங்கேற்றுள்ளது. இதனால் ஒன்றிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் விரக்தி அடைந் துள்ளனர்.அதே போல் ஒவ்வொறு போட்டிகளுக்கும் வயது வாரியாக வீரர்கள் தேர்வு செய்வதிலும் பல்வேறு  முறைகேடுகள் நடந்து வருவதால் திறமையான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் 14 வயது, 16, 18, 21 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் வயது சான்றிதழ் மாவட்ட விளையாட்டு கழக செயலாளர் கையெழுத்திட்டு சான்று கொடுத்தால் போதுமானதாக உள்ளது.

               இந்நிலையில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சில உடற்கல்வி ஆசிரியர்கள், அதிகாரிகள் தங்களது பள்ளி அணிகள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் 14 வயது பிரிவு போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் போது தங்களது பள்ளியிலேயே பிளஸ் 2 படிக்கும் 16, 17 வயதுள்ள மாணவர்களை முறைகேடாக தேர்வு செய்து அவர்களுக்கு 14 வயது என சான்றிதழ் கொடுத்து போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர். வேறு சில பள்ளிகளோ, தங்கள் பள்ளியில் படிக்காத திறமையுள்ள வெளி மாணவரை தேர்வு செய்து பள்ளிகளின் சார்பில் போட்டிகளில் பங் கேற்க வைக்கின்றனஇதனால் விளையாட் டில் திறமை இருந்தும் 14 வயதுடைய மாணவர்கள் வயதில் மூத்த வீரர்களிடம் மோதி தோல்வி அடைந்து வருகின்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு உண்மையான திறமையுள்ள விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து போட்டிகளில் பங் கேற்க செய்தால் விளையாட்டின் தரம் உயரும்.

Read more »

ஜெ., மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

பரங்கிப்பேட்டை :

            அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான தேர் தல் விதிமுறை மீறல் வழக்கு வரும் பிப்., 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., 2006ம் ஆண்டு நான்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தடை உத்தரவு பெற்றார். இதனால், பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதுவரை 26 தடவை, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வசந்தி, பிப்., 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Read more »

கடலூர் அருகே உப்பனாற்றில் படகு கவிழ்ந்தது : 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் :

                    கடலூர் அருகே உப்பனாற்றில் பள்ளி மாணவ, மாணவியர் சென்ற படகு கவிழ்ந்ததில், 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அடுத்த நொச்சிக்காடு காலனி, வள்ளலார் நகர், நந்தன் நகர் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து தடம் எண்.32 அரசு டவுன் பஸ், காலை 8 மணிக்கு விடப்படுகிறது;  அதற்கு பிறகு 10 மணிக்கு ஒரு பஸ் விடப்படுகிறது. பஸ்சை தவற விடுபவர்கள், நொச்சிக்காடு உப்பனாற்று வழியாக சங்கொலிக்குப்பம் வரை படகில் சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து பள்ளிக்கு செல்கின்றனர்.நேற்று காலை 8 மணி பஸ்சை தவறவிட்ட 41 மாணவ, மாணவியர், கயிற்றை கட்டி இயக்கும் படகில் ஏறி அவர்களாகவே படகை இயக்கினர். கரை அருகே வந்த போது திடீரென படகு கவிழ்ந்ததில், மாணவ, மாணவியர் புத்தக பையுடன் தண்ணீரில் விழுந்தனர்.

             அங்கிருந்தவர்கள், தண்ணீரில் மூழ்கிய வித்யா(13), ஜெயசித்ரா(14), சந்திரா(16), விக்னேஸ்வரன்(17), ஜெயேந்திரன்(13), அருள்ராஜ்(13) உட்பட 19 பேரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள், விபத்து குறித்து மாணவர்களிடம் விசாரித்தனர். ஆழம் இல்லாத பகுதியில் படகு கவிழ்ந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.  பள்ளி நேரத்தில் பஸ் விடப்பட்டால், இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம். கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் தம்புசாமி, துறைமுகம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior