உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

கடலூர் அருகே உப்பனாற்றில் படகு கவிழ்ந்தது : 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் :

                    கடலூர் அருகே உப்பனாற்றில் பள்ளி மாணவ, மாணவியர் சென்ற படகு கவிழ்ந்ததில், 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அடுத்த நொச்சிக்காடு காலனி, வள்ளலார் நகர், நந்தன் நகர் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து தடம் எண்.32 அரசு டவுன் பஸ், காலை 8 மணிக்கு விடப்படுகிறது;  அதற்கு பிறகு 10 மணிக்கு ஒரு பஸ் விடப்படுகிறது. பஸ்சை தவற விடுபவர்கள், நொச்சிக்காடு உப்பனாற்று வழியாக சங்கொலிக்குப்பம் வரை படகில் சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து பள்ளிக்கு செல்கின்றனர்.நேற்று காலை 8 மணி பஸ்சை தவறவிட்ட 41 மாணவ, மாணவியர், கயிற்றை கட்டி இயக்கும் படகில் ஏறி அவர்களாகவே படகை இயக்கினர். கரை அருகே வந்த போது திடீரென படகு கவிழ்ந்ததில், மாணவ, மாணவியர் புத்தக பையுடன் தண்ணீரில் விழுந்தனர்.

             அங்கிருந்தவர்கள், தண்ணீரில் மூழ்கிய வித்யா(13), ஜெயசித்ரா(14), சந்திரா(16), விக்னேஸ்வரன்(17), ஜெயேந்திரன்(13), அருள்ராஜ்(13) உட்பட 19 பேரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள், விபத்து குறித்து மாணவர்களிடம் விசாரித்தனர். ஆழம் இல்லாத பகுதியில் படகு கவிழ்ந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.  பள்ளி நேரத்தில் பஸ் விடப்பட்டால், இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம். கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் தம்புசாமி, துறைமுகம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior