உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

விளையாட்டு வீரர்கள் தேர்வில் முறைகேடு : திறமையானவர்கள் புறக்கணிப்பு¬

கடலூர் :

                     மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால், திறமையுள்ள வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாவட்ட அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் டிசம்பர் மாதம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந் தது. இதில் 13 ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங் கேற்றனர். கோ-கோ, கபடி, ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து உட்பட பல போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார் கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.இதில் விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கபடி மற்றும் ஹாக்கி போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். அதே போல் கால்பந்தில் இரண்டாமிடமும், கோ-கோவில் மூன்றாமிடமும் பெற்றனர்.

                    இந்நிலையில் மாநில அளவிலான பைக்கா ஹாக்கி, கபடி போட்டிகள் கரூரில் கடந்த வாரம் நடத்தப்பட்டு தேசிய அள வில் பங்கேற்கும் வீரர் கள் தேர்வும் முடிந்துள்ளது. இதில் பங்கேற்ற கடலூர் மாவட்ட அணிக்கு விருத் தாசலம் அரசு மகளிர் பள் ளியைச் சேர்ந்த ஒரு மாணவிகள்கூட தேர்வு செய்யப் படாமல், சிபாரிசின் அடிப்படையில் வேறு மாணவிகள் தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளனர் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள்.மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவோம் என ஆவலுடன் காத்திருந்த உண்மையான திறமையுடைய விருத்தாசலம் பள்ளி மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.அதே போல் கடலூர் ஒன்றியம் நடுவீரப்பட்டில் நடந்த ஒன்றிய அளவிலான விளையாட்டு போட் டியில் கே.என்., பேட்டை அணி கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்றது.

               ஆனால் இந்த அணியைச் சேர்ந்த வீரர்கள் ஒருவர் கூட கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை கொண்ட அணியே போட் டிகளில் பங்கேற்றுள்ளது. இதனால் ஒன்றிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் விரக்தி அடைந் துள்ளனர்.அதே போல் ஒவ்வொறு போட்டிகளுக்கும் வயது வாரியாக வீரர்கள் தேர்வு செய்வதிலும் பல்வேறு  முறைகேடுகள் நடந்து வருவதால் திறமையான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் 14 வயது, 16, 18, 21 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் வயது சான்றிதழ் மாவட்ட விளையாட்டு கழக செயலாளர் கையெழுத்திட்டு சான்று கொடுத்தால் போதுமானதாக உள்ளது.

               இந்நிலையில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சில உடற்கல்வி ஆசிரியர்கள், அதிகாரிகள் தங்களது பள்ளி அணிகள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் 14 வயது பிரிவு போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் போது தங்களது பள்ளியிலேயே பிளஸ் 2 படிக்கும் 16, 17 வயதுள்ள மாணவர்களை முறைகேடாக தேர்வு செய்து அவர்களுக்கு 14 வயது என சான்றிதழ் கொடுத்து போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர். வேறு சில பள்ளிகளோ, தங்கள் பள்ளியில் படிக்காத திறமையுள்ள வெளி மாணவரை தேர்வு செய்து பள்ளிகளின் சார்பில் போட்டிகளில் பங் கேற்க வைக்கின்றனஇதனால் விளையாட் டில் திறமை இருந்தும் 14 வயதுடைய மாணவர்கள் வயதில் மூத்த வீரர்களிடம் மோதி தோல்வி அடைந்து வருகின்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு உண்மையான திறமையுள்ள விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து போட்டிகளில் பங் கேற்க செய்தால் விளையாட்டின் தரம் உயரும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior