உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 27, 2011

கடலூரில் வஞ்சரம் மீன்கள் ரூ.21 லட்சத்திற்கு ஏலம்

கடலூர் முதுநகர் : 

        கடலூரில் நேற்று, 21 லட்சம் ரூபா#க்கு வஞ்சரம் மீன்கள் ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மீன்பிடித் தடை காலத்திற்கு பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் டன் கணக்கில் பால் சுறாக்கள், வஞ்சரம், சூரை மீன்கள் என, தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் கடலூரில் அதிகளவில் சிக்குகின்றன.

         கடலின் உட்பகுதியில் அதிக அளவு கடல் சீற்றம் காரணமாக, மீன்கள் கரை பகுதிக்கு படையெடுத்து வருவதால், அதிகளவில் இவ்வகை மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலூரில் மீன் வரத்து அதிகமானதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா வியாபாரிகள் ஏராளமானோர் கடலூர் மீன்பிடித் துறைமுகத்திற்கு படையெடுத்துள்ளனர். இதனால், மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

            குறிப்பாக, கிலோ ஒன்று 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சரம் மீன்கள் தற்போது 350 ரூபாயும், 60க்கு விற்ற சூரை மீன்கள் 80 ரூபாயும், 1,500 ரூபாய்க்கு விற்ற 70 கிலோ எடையுள்ள மத்தி மீன் பாக்ஸ் ஒன்று தற்போது 2,700 ரூபாய் வரை விலை போகிறது. மீன்கள் அதிகளவு விலை போவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

           கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், 6 டன் வஞ்சரம் மீன்கள் மற்றும் சுறா மீன்கள், பாறை மீன்கள் சிக்கின. கிலோ 350 ரூபாய்க்கு ஏலம் போன வஞ்சரம் மீன்கள் அனைத்தும் பெங்களூருக்கு அனுப்பப்பட்டன. நேற்று சிக்கிய வஞ்சரம் மீன்கள் மட்டும், 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.




Read more »

கடலூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ரூ.1400 கோடி கடன்

திட்டக்குடி:
 
            திட்டக்குடி, ராமநத்தம் இந்தியன் வங்கி கிளைகளில் சிறப்பு கடன் வசூல் முகாம் நடந்தது. முகாமிற்கு திட்டக்குடி வங்கி மேலாளர் அனில்குமார் தலைமை தாங்கினார். 
 
            முதுநிலை மேலாளர் ராமச்சந்திரன், மண்டல அலுவல் அதிகாரி சுந்தர், ராமநத்தம் வங்கி கிளை மேலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி மேலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.   மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் இதில் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வட்டித்தொகையை தள்ளுபடி செய்து பேசினார்

அப்போது மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் கூறியது:-

            கடலூர் மாவட்டத்தில் மட்டும் முன்னோடி வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர், கார், உழவு எந்திரங்கள் வாங்கவும், பாசன வசதிகள் பெறவும், ஆழ்துளை கிணறு அமைக்கவும், சுயதொழில் மற்றும் கல்வி கடனாகவும் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வழங்கி உள்ளோம்.   வரா கடன் வசூல் என திட்டமிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 43 கிளைகளில் 10 சிறப்பு முகாம்கள் நடத்தி கடனை வசூலித்து வருகிறோம். இதில் வாடிக்கையாளர்கள் எளிதாக கடனை திருப்பி செலுத்தும் வகையில் வட்டியில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்து கடனை வசூல் செய்து வருகிறோம்,

                இதனால் விவசாயிகள், சுயதொழில் தொடங்கியவர்கள் தங்கள் கடனை திருப்பி செலுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சேமிக்க உதவும். சிறப்பு கடன் வசூல் முகாம் மூலம் இதுவரை ரூ.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.  வங்கியில் வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கிராமங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகவர்கள் மூலம் சம்மந்தப்பட்ட கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் அவரவர்வங்கி கணக்கில் இருந்து ரூ 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கவும், பணம் கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                 இதனால் பணம் எடுக்க சேமிக்க வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் அவர்கள் வீட்டிலேயே பணம் எடுக்கவும் சேமிக்கவும் முடியும். இவ்வாறு மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் பேசினார். 
 
 
 
 
 

Read more »

அடிப்படை வசதிகளை செய்து தர முன்னுரிமை : நெய்வேலி எம்.எல்.ஏ., எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன்


அடிப்படை வசதிகளை செய்து தர முன்னுரிமை கொடுத்து பாடுபடுவேன்: 

 சிவசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பேச்சு
கடலூர்:

             கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சொரத்தூர், கீழக்குப்பம், நடுக்குப்பம், வல்லம், மானடிகுப்பம், பேர்பெரியாங்குப்பம் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதன்பின் தனது சொந்த கிராமமான முத்தாண்டிக்குப்பத்தில் சிவசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 
அப்போது எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ. பேசியது:-

                  முதல்- அமைச்சர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த கால தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட மின்தடை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி போன்ற காரணங்களுக்கு தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பினார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது அசைக்க முடியாத நம்பிக்கையால் ஆட்சி பீடத்தில் உட்கார வைத்தார்கள். விவசாய குடும்பத்தில் பிறந்த சாதாரணமான என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்ப்பவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கியவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா. மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.2 1/2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் வழங்க உத்தரவிட்டவர் முதல்- அமைச்சர். தமிழ்நாட்டில் அதர்மத்தை அழிக்க வந்த தாயாக செயல்பட்டு வருபவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா. தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் அகல பாதாள பள்ளத்தில் விழுந்தவர்கள் எழுந்திருக்க முடியாத அளவுக்கு வாக்காளர்கள் ஓட்டு மூலம் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

              எந்த பிரச்சினையாக இருந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். அதை தீர்த்து வைக்க பாடுபடுவேன். எதிர் வரும் காலம் நல்ல காலமாகவும், பொற்காலமாகவும் அமையும். அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்து தருவேன். பல்வேறு தடைகளை மீறி வாக்காளித்து வெற்றிப்பெற செய்த வாக்காளர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ. பேசினார்.
                 நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் வக்கீல் ராஜசேகர், நிர்வாகி அனந்தராமன், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் பழனி, தொகுதி இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், வக்கீல் சிவசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior