உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 27, 2011

கடலூரில் வஞ்சரம் மீன்கள் ரூ.21 லட்சத்திற்கு ஏலம்

கடலூர் முதுநகர் : 

        கடலூரில் நேற்று, 21 லட்சம் ரூபா#க்கு வஞ்சரம் மீன்கள் ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மீன்பிடித் தடை காலத்திற்கு பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் டன் கணக்கில் பால் சுறாக்கள், வஞ்சரம், சூரை மீன்கள் என, தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் கடலூரில் அதிகளவில் சிக்குகின்றன.

         கடலின் உட்பகுதியில் அதிக அளவு கடல் சீற்றம் காரணமாக, மீன்கள் கரை பகுதிக்கு படையெடுத்து வருவதால், அதிகளவில் இவ்வகை மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலூரில் மீன் வரத்து அதிகமானதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா வியாபாரிகள் ஏராளமானோர் கடலூர் மீன்பிடித் துறைமுகத்திற்கு படையெடுத்துள்ளனர். இதனால், மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

            குறிப்பாக, கிலோ ஒன்று 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சரம் மீன்கள் தற்போது 350 ரூபாயும், 60க்கு விற்ற சூரை மீன்கள் 80 ரூபாயும், 1,500 ரூபாய்க்கு விற்ற 70 கிலோ எடையுள்ள மத்தி மீன் பாக்ஸ் ஒன்று தற்போது 2,700 ரூபாய் வரை விலை போகிறது. மீன்கள் அதிகளவு விலை போவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

           கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், 6 டன் வஞ்சரம் மீன்கள் மற்றும் சுறா மீன்கள், பாறை மீன்கள் சிக்கின. கிலோ 350 ரூபாய்க்கு ஏலம் போன வஞ்சரம் மீன்கள் அனைத்தும் பெங்களூருக்கு அனுப்பப்பட்டன. நேற்று சிக்கிய வஞ்சரம் மீன்கள் மட்டும், 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior