உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 09, 2009

பண்ருட்டி அருகே இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவன்- மாமியார் மீது போலீசில் புகார்

பண்ருட்டி:

              பண்ருட்டி அருகே பக்கிரிபாளையம் சின்ன பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 27). இவரது மனைவி ஜரினா பேகம் (25). இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத் துக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்த அப்துல்ரகுமான் பின்னர் வெளிநாடு செல்ல வில்லை.

               திருமணமான சில மாதங்கள் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த அப்துல் ரகுமான் அதன்பிறகு ஜரினாபேகத்தை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்துல் ரகுமானின் தாய் சலிமாபீ, தம்பி இஸ்மாயில் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து ஜரினாபேகம் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்துல் ரகுமான் மற்றும் அவரது தாய், தம்பி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior