உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 03, 2009

ரூ.38 கோடியில் சிதம்பரம் கோயிலை சீரமைக்க திட்டம்

சிதம்பரம், அக். 29:

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களை ரூ.200 கோடியில் சீரமைத்து புதுப்பிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் ரூ.38 கோடியில் சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் சீரமைத்து புதுப்பிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் ந. திருமகள் தெரிவித்தார்.
இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் 4 பிரகாரங்கள் பகுதிகளிலுள்ள குடிநீர்த் தொட்டிகளை ரூ.3 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.24.50 லட்சத்தில் 4 உயர்கோபுர மின்விளக்குகள், சிவகங்கை குளத்தைச் சுற்றி குழல் விளக்குகள், 4 பிரகாரங்களை சுற்றி குழல் விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப் பணிகளுக்கு ஆணைய பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், பழனி தண்டாயுதபாணி ஆலய நிதியிலிருந்து ரூ.19.50 லட்சமும் பெறப்பட்டுள்ளது.
இவற்றை நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரியகருப்பன் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர். கடலூர் பாடலீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.18 லட்சத்தில் செலவில் கட்டப்பட்டுள்ள லோக விக்ரகங்கள் பாதுகாப்பு கட்டடம், ரூ.1 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தவனம் ஆகியவறையும் இவ்விழா மேடையில் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைக்கிறார்.
தரிசனக் கட்டணம் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. சிற்றம்பலமேடையில் இலவச தரிசனமும் உண்டு. சிறப்பு தரிசனமும் உண்டு.
திருக்கோயிலை மேம்படுத்த கட்டணம் வசூலிப்பது என்பது அவசியமானதாகும். ஆனால், உள்ளூர் பக்தர்கள் இடையூறின்றியும், கட்டணமின்றியும் தரிசிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆலயத்தின் அனைத்து சாவிகளும் பொது தீட்சிதர்களிடமிருந்து பெறப்பட்டு இரட்டைச் சாவி முறை அமல்படுத்தப்படும். தீட்சிதர்கள் ரசீது அடித்து கட்டணம் வசூலிப்பதாக வந்துள்ள புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior