உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 03, 2009

இணைப்பு சாலைக்கு முதல்வர் பெயர் பண்ருட்டி நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக, மதிமுக வெளிநடப்பு

பண்ருட்டி, அக். 29:

கும்பகோணம்- கடலூர் சாலை இணைப்புச் சாலைக்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இங்கு வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பண்ருட்டி நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எம். பச்சையப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைபாடுளை எடுத்துரைத்து, அவற்றுக்குத் தீர்வு காண வலியுறுத்தினர்.
பழனி (திமுக): நகராட்சியில் செயல்படாத வரி விதிப்பு குழுவை ரத்து செய்யுங்கள்.
தலைவர்: வாலாஜா கால்வாய் பணி நடைபெறவுள்ளது. வரி குறைக்க அதிகாரம் கொடுக்கவில்லை; யாரேனும் தவறு செய்தால் தெரியப்படுத்துங்கள். கார்த்தி (அதிமுக): குழந்தைகளுக்கு 3 வயது ஆகியும் மகப்பேறு உதவி கிடைக்கவில்லை.
தலைவர்: நிதி வந்ததும் வழங்கப்படும். இதுவரை ரூ.2 லட்சம் வழங்கியுள்ளோம்.
கே. கோதண்டபாணி (துணைத் தலைவர்) பேசுகையில், குடிநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் பவுடர் போடவில்லை என புகார் தெரிவித்தார். மேலும், மழைக் காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ரகூப்: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும்.
சரஸ்வதி பேசுகையில், சிறப்பு தீர்மானத்தில் உள்ள பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
இதனிடையே, கும்பகோணம்- கடலூர் சாலையை இணைக்கும் இணைப்பு சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டுவதை எதிர்த்து எம். எம். கமலக்கண்ணன் தலைமையில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior