உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 03, 2009

நாளை கலைஞர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்


கடலூர், அக். 30:


உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளை அதிகரிக்கும்பொருட்டு, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய 3 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் முகாம்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கிவைக்கிறார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத் திட்டத்தின் கீழ், இதுவரை கடலூர் வட்டத்தில் 1,02,599 பேருக்கும், சிதம்பரம் வட்டத்தில் 82,894 பேருக்கும், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 50,999 பேருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டு, 20,660 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 207 பேர் பயன்பெற்று உள்ளனர். 39 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நவம்பர் 1-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் முகாம்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
வருமுன்காப்போம் திட்டத்தில் பங்கேற்று, மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களும் இதில் பங்கேற்கலாம்.
20-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் ஆட்சியர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior