உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 18, 2009

நாளை மாநில கூடைப்பந்து அணிக்கான தேர்வு

நெய்வேலி, நவ. 17:

தேசிய அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கான வீரர், வீராங்கனைக்கான தேர்வு வரும் 19 மற்றும் 20 தேதிகளில் சென்னை கீழ்ப்பாக்கம் ஜேஜே உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழக செயலர் எஸ்.நடராஜன் அறிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.நடராஜன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
36-வது தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டி டிசம்பர் 4 முதல் 10-ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் சிட்டோர்கார் எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர் வீராங்கனைக்கான தேர்வு சென்னையில் நவம்பர் 19-ம் தேதி ஆண்களுக்கும், 20-ம் தேதி மகளிருக்கும் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க தகுதியுள்ள 13-வயதுக்கு உட்பட்ட மாணவ,மாணவியர் மேற்கண்ட தேதிகளில் காலை 7 மணிக்கு தங்களுடைய பிறப்புச் சான்றிதழுடன் சென்னை கீழ்ப்பாக்கம் ஜேஜே உள்விளையாட்டரங்குக்கு வருமாறு தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்வதாக நடராஜன் அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior