உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 18, 2009

ஆலைக் கழிவுகளால் 100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு


கடலூர், நவ.17:


சர்க்கரை ஆலைக் கழிவுகளால் நெல்லிக்குப்பம் அருகே 100 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்து உள்ளது.
இச்சங்கத்தின் கடலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் ஒன்றியம் பில்லாலி, குணமங்கலம், நெசனூர், மேல்பாதி ஆகிய கிராமங்களில் சர்க்கரை ஆலைக் கழிவுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அண்மையிóல் பெய்த மழையால், ஆலைக் கழிவுநீர் வாய்க்காலில் மழைநீருடன் திறந்து விடப்பட்டது. இதனால் வாய்க்கால் நிரம்பி வழிந்து, விளைநிலங்களில் புகுந்து விட்டது.
இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர் முற்றிலும் அழிந்து விட்டது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 23 ஆயிரம் வீதம் சம்பந்தப்பட்ட ஆலையிடம் இருந்து நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். திருமாணிக்குழி, ஓட்டேரி கிராமங்களுக்குச் செல்லும் பாலங்களை உயர்த்திக் கட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட நிலங்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.நாராயணன், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் மாதவன் ஆகியோர் பார்வையிட்டனர். ஒன்றியச் செயலாளர் மாதவன், விவசாயச் சங்க துணைத் தலைவர் ஆறுமுகம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior