உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 18, 2009

விருத்தாசலத்துக்கு நாளை கனிமொழி வருகை

கடலூர், நவ.17:

விருத்தாசலத்தில் வியாழக்கிழமை நடைபெறும் கூட்டுறவு வார விழாவில் கனிமொழி எம்.பி. (படம்) கலந்து கொள்கிறார்.
விருத்தாசலம் ராஜா மகாலில் கூட்டுறவு வாரவிழா, கூட்டுறவு சங்கங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உறுப்பினருக்கான சேவையையும், அவர்களுடனான தகவல் தொடர்பினையும் மேம்படுத்துதல் நாளாகக் கொண்டாடப் படுகிறது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகிக்கிறார். சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பரிசுகள் வழங்குகிறார். மாநிலங்கள் அவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்குகிறார். விழாவில் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் கூட்டுறவுத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior