உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 21, 2010

கடலூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப் பாசன விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. ​7 கோடி ஒதுக்கீடு

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முலம் கடன் வழங்குவதற்கு ரூ.​ 7 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                      தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனத்துக்காக 2010-11-ம் ஆண்டுக்கு,​​ ரூ.​ 7 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.​ இதில் தகுதி அடிப்படையில் 50 சதம் வரை மானியம் அளிக்கப்படும்.நெல்,​ ​ கரும்பு,​​ வாழை,​​ காய்கறி,​​ பழங்கள்,​​ பருப்பு வகைகள்,​​ எண்ணெய் வித்துகள்,​​ போன்றவற்றைச் சாகுபடி செய்ய சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்தக் கடன் வழங்கப்படும். பொதுச் சேவை மையங்கள் இயங்கி வரும் 16 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில்,​​ விவசாயிகள் தங்களது நிலங்கள் தொடர்பான கணினிச் சிட்டா அடங்கல்களை பெற்றுக் கொள்ளலாம்.​ இதன்மூலம் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.

                     குறிஞ்சிப்பாடி,​​ லால்பேட்டை உள்ளிட்ட 7 கூட்டுறவு வேளாண்மைச் சங்கங்களில் வேளாண் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.​ இவற்றில் மண் பரிசோதனை,​​ பாசன நீர் பரிசோதனை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.​ இவற்றில் உரம்,​​ பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படும்.குறிஞ்சிப்பாடி,​​ ஆயிக்குப்பம்,​​ பெண்ணாடம்,​​ தொழுதூர்,​​ முட்லூர்,​​ கருங்குழி,​​ தீர்த்தனகரி,​​ கரைமேடு,​​ மோவூர்,​​ ஆவினன்குடி,​​ சேத்தியாத்தோப்பு,​​ வி.சாத்தமங்கலம் ஆகிய 12 தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில்,​​ விவசாய சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளன.​ இவற்றின் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான பண்ணை இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.​ பண்ணை இயந்திர மயமாக்கல் திட்டம் இவ்வாறு செயல்படுத்தப்படுகிறது.​ 

                         ​விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறையைப் சமாளிக்கும் வகையில்,​​ கரைமேடு,​​ ஆய்க்குப்பம்,​​ கருங்குழி,​​ தீர்த்தனகரி,​​ குறிஞ்சிப்பாடி ஆகிய 5 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில்,​​ கூட்டுப் பொறுப்புக்குழு,​​ சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு,​​ பசுமை ராணுவம் அமைக்கப்பட்டு உள்ளது. வேளாண் இயந்திரங்களில் பயிற்சி பெற்ற இவர்களைக் கொண்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு இயந்திரம் மூலம் நடவு பயிற்சி அளிக்கப்படும்.​ பசுமை ராணுவம் மூலம் 500 ஏக்கரில் இயந்திரம் மூலம் நடவு செய்ய திட்டமிட்டு,​​ 140 ஏக்கரில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டு உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior