உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 21, 2010

கணினிப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

கடலூர்:

                   அறக்கட்டளை மூலம் குறைந்த கட்டணத்தில் கணினிப் பயிற்சி பெற்ற மாணவ மாணவியருக்கு,​​ முன்னாள் எம்எல்ஏவும் திமுக மாநில மாணவரணி அமைப்பாளருமான இள.புகழேந்தி அண்மையில் சான்றிதழ் வழங்கினார். 

                       கடலூர் புதுப்பாளையம் சி.சி.எஸ்.​ அறக்கட்டளை சார்பில் 70 மாணவ} மாணவியருக்கு,​​ குறைந்த கட்டணத்தில் கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டது.​ இதில் பயின்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஸ்கோப் தொண்டு நிறுவனத் தலைமை நிர்வாகி சத்தியபாபு தலைமையில் நடந்தது.​  மாணவ மாணவியருக்குச் சான்றிதழ்களை,​​ முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி வழங்கி பாராட்டிப் பேசினார்.​ நிகழ்ச்சியில் சி.சி.எஸ்.​அறக்கட்டளை நிர்வாகி செல்வமுருகன்,​​ தலைமை பயிற்றுநர் ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.​ மாணவ } மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior