உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 07, 2010

நெய்வேலி கோர்ட்டில் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜர்

நெய்வேலி:

                         அவதூறு வழக்கு தொடர்பாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நெய்வேலி சார்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

                                         கடந்த 2007-ம் ஆண்டு நெய்வேலியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், தமிழக முதல்வரை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக நெய்வேலி நகரப் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு விசாரணை நெய்வேலி சார்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. இதனிடையே தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றம் ஜூலை 5-ம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட பிறப்பித்தது.

                                 இதையடுத்து நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆகஸ்ட் 20-ம் தேதி நெய்வேலி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ.எஸ்.ராஜா முன்னிலையில் சரணடைந்தார். அதிமுக வழக்கறிஞர்கள் ரவீந்திரன், பாஸ்கர், ராஜசேகர், சுமதி, நடராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டோர் அவருக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்தனர். இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஜாமீன் வழங்கி, செப்டம்பர் 6-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் திங்கள்கிழமை நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து வழக்கை இம்மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நடுவர் ஏ.எஸ்.ராஜா.

                    நீதிமன்றத்தில் சரணடைய வந்திருந்த எஸ்.எஸ்.சந்திரனுடன் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் எம்.சி.சம்பத், மாவட்ட முன்னாள் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி நகர அதிமுக செயலர் ரவிச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதி வெற்றிவேல் தொழிற்சங்க செயலர் உதயக்குமார், எம்.பி. சிவசுப்ரமணியம் ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior